Saturday, November 27, 2010

கண்ணீர்

என் விழியோரம் வழியும் கண்ணீர் துளித்துளியாய் வடியட்டும்...
கையால் துடைத்து தடத்தையழிக்க நான் விரும்பவில்லை...
கார்த்திகையின் கண்ணீர் மழையிலும் கரைந்து விடக்கூடாது...
சுடர் விட்டெரியும் விளக்கின் வெப்பத்திலும் உலர்ந்து விடக்கூடாது...
உடலெங்கும் வடிந்து உரமாய் எனக்குள்ளே அவை உறையட்டுமே...
என்னுள்ளே விதைக்கப்பட்ட வீரம் வீறு கொண்டெழுவதற்காக...