Friday, February 08, 2013

வலிகளோடு வாழப் பழகிக் கொண்டேன்.


விதியா என்று சிந்திக்கத் தலைப்பட்டாலும்
மனம் கலங்கி சிந்தனை சிதற மாட்டேன்.
தன்னம்பிக்கை என் தாரக மந்திரம்.
எல்லாம் வெல்லலாம். என்னால் முடியும்.

எத்தடை வரினும் எதிர் கொள்வேன்.
தோல்விகள் தொடர்ந்தாலும் தளரமாட்டேன்.
விளைவுகள் எதனையும் ஏற்றுக் கொள்வேன்.
வலிகளோடு வாழப் பழகிக் கொண்டேன்.

- தனஞ்சி.