Sunday, February 26, 2017

போய் வாருமையா...

தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட குரல்களில் சாந்தனின் குரல் இரண்டாவது. (முதற்குரல் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே ஒலித்தாலும் அதற்கு ஈர்க்கப்படாத/ கட்டுப்படாத தமிழர்களே இல்லை எனலாம்.)

எத்தனை எத்தனை உள்ளங்களை ஒரு புள்ளியில் இலட்சியத்திற்காக பாடல்கள் மூலம் இணைத்த குரல்களில் முதன்மையான குரலுக்குச் சொந்தக்காரன் இன்று விதைக்கப்படுகிறார். உம் குரல் என்றென்றும் ஈழத் தமிழர் மனங்களில், அவர்களின் உணர்வுகளோடு வாழுமையா... நீர் போய் வாரும்...

-தனஞ்சி