tag:blogger.com,1999:blog-34757189862464474502024-03-05T20:38:09.573+05:30தாய்மடிஎண்ணங்களை மீட்டு அரவணைப்புடன் ஆறுதல் தேட...பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-4545267112024688922017-02-26T17:05:00.000+05:302017-02-26T17:05:39.681+05:30 போய் வாருமையா...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட குரல்களில் சாந்தனின் குரல் இரண்டாவது. (முதற்குரல் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே ஒலித்தாலும் அதற்கு ஈர்க்கப்படாத/ கட்டுப்படாத தமிழர்களே இல்லை எனலாம்.)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எத்தனை எத்தனை உள்ளங்களை ஒரு புள்ளியில் இலட்சியத்திற்காக பாடல்கள் மூலம் இணைத்த குரல்களில் முதன்மையான குரலுக்குச் சொந்தக்காரன் இன்று விதைக்கப்படுகிறார். உம் குரல் என்றென்றும் ஈழத் தமிழர் மனங்களில், அவர்களின் உணர்வுகளோடு வாழுமையா... நீர் போய் வாரும்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
-தனஞ்சி</div>
</div>
பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-91001052904393140272013-10-04T14:42:00.003+05:302013-10-04T14:44:41.393+05:30அஞ்சாமாண்டு பெறுபேறும் விளைவுகளும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
எனக்கு இன்னமும் விளங்காமல் இருக்கிறதுகளில ஒண்டு எங்கட சனம் ஏனுந்த அஞ்சாம் ஆண்டு புலமைப் பரிசில் சோதினைக்கு இவ்வளவு முக்கியத்துவம் குடுக்குறாங்கள் எண்டதுதான். பத்திரிகையில ஒரு விளம்பரம் அஞ்சாம் ஆண்டு சித்தியடைஞ்ச ஒருவருக்கு பட்டமளிப்பு விழாவுக்கு அணியிற மாதிரி ஒரு தொப்பியும் அதற்குரிய ஒரு உடுப்பும் போட்டு உறவினர்களால வாழ்த்து விளம்பரம் போடப்பட்டிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தனிப்பட்ட விளம்பரம் போடுறது அவரவர் உரிமை, அதை நான் தடுக்கவில்லை. ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றித் தான் நான் யோசிக்கிறேன். புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தால் வறிய மாணவர்கள் மட்டுமே மாதாந்த உதவி கிடைக்கும். பலருக்கு கிடைப்பதில்லை. இதனை எந்தவொரு பெற்றோரும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. சித்தியடையாத மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும். சித்தியடையாத மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிப்பார்கள். இதுவே பல பிரச்சினைகளுக்கு ஆரம்பமாக அமைவதுமுண்டு. இதில சித்தியடையாவிட்டால் வாழ்க்கையே தொலைஞ்சு போகுமெண்ட பிழையான எண்ணம் மாணவர்கள் மத்தியில விதைக்கப் படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுயமாக கற்றலை இன்னும் உணராத வயதிலுள்ள மாணவர்களுக்கு கல்வி மேல் வெறுப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக நான் பார்க்கிறேன். கல்விக்கு முக்கியம் குடுக்கப்படலாம் தான் அதுக்காக அதில்லையெண்டால் எதுவுமேயில்லை எண்ட மாயை உருவாக்கப்படக்கூடாது. அதுவும் சிறு வயதிலேயே... </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெற்றோர்களே, உறவினர்களே அஞ்சாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இந்தளவுக்கு பெரிசாக்கி விளம்பரம் பண்ணுவதன் மூலம் சிறு பிள்ளைகளின் மனதில் குறைந்த புள்ளியெடுத்தவர்களை ஒதுக்கி வைக்கும் மனப்பாங்கையும் மற்றவர்களின் மேல் வெறுப்பு, பொறாமை காழ்ப்புணர்ச்சிகள் வளர்வதையும் ஊக்குவிக்காதீர்கள். இந்த பெறுபேற்றை வைத்து நான் படிப்பதற்கு பொருத்தமற்றவன் என எந்தவொரு மாணவனோ அல்லது எனது பிள்ளை படிப்பதற்கு லாயக்கில்லாதவன் என எந்தவொரு பெற்றோரும் முடிவெடுப்பார்களாயின் அதுவே அவர்களது வாழ்க்கையின் அழிவின் ஆரம்பமாகும். அதில் எந்த உண்மையும் இல்லை என்பதை நாம் உணர்வதேயில்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
- தனஞ்சி</div>
</div>
பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-8304943895766587972013-07-18T16:38:00.000+05:302013-07-18T18:16:56.733+05:30யாழ் பொறியியல் பீடமும் எங்கட சனத்தின்ர கதையும்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. அது ஆரம்பிப்பது நல்லதா இல்லையா என்ற விவாதம் இன்னமும் முற்றுப் பெறாமல் போய்க் கொண்டிருக்கிறது. இன்று பல்கலைக்கழக வளாகத்தினுள் ஒருவர் இது சம்பந்தமாக விவாதித்ததை கேட்டு அதிர்ந்து போனேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<i>“எங்கட பொடியளின்ர படிப்பை பாழாக்குறதுக்குத் தானே தொடங்குறீங்கள். எங்க தொடங்கப் போறீங்கள்? கிளிநொச்சியில வெறும் காணி தானே இருக்கு. ஒழுங்கான கட்டிடங்கள் இல்லை. ஆய்வுகூட வசதிகள் இல்லை. அதுக்குள்ள கொண்டு போய் இஞ்சினியர் பொடியளைப் பாழாக்கப் போறியள். அவங்கள் படிச்சு முடிச்சு வெளியேற 8 வருசம் செல்லப் போகுது. இவங்கள் வெளியேறேக்க அவனோட மற்ற கம்பசுக்குப் படிக்கப் போனவங்கள் வேலைக்கு போய் 4 வருசம் அனுபவம் எடுத்திடுவாங்கள். எங்கட பொடியளை நீங்களே கெடுத்துக் குட்டிச் சுவராக்குங்கோ... உங்களுக்கென்ன சும்மா இருக்க சம்பளம் வரும்தானே... உங்கட பாட்டை நீங்கள் பாத்துக் கொள்ளுவீங்கள். படிக்க வாற பொடியளைப் பற்றி உங்களுக்கென்ன அக்கறை? எங்கட படிப்பை அழிக்கிறதுதானே அவங்கட நோக்கம். அதுக்கு நீங்களும் துணை போங்கோ... எங்கட தமிழ் சனம் அழிஞ்சது உங்களை மாரியானாக்களால தானே...</i>”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொறியியல் பீடம் ஆரம்பிக்கிறது நல்லதோ கூடாதோ எண்ட விவாதம் காலாவதியாகி விட்டது. ’என்னாது காந்தி செத்துட்டாரா?’ என்று இப்போது கேட்பதைப் போன்றது. எனக்குத் தெரிந்து 1974ம் ஆண்டிலிருந்து பொறியியல் பீடம் ஆரம்பிப்பது பற்றிய முன்னெடுப்புகளும் விவாதங்களும் இருந்து கொண்டே இருக்கின்றன. நான் விரும்பிறனோ விரும்பவில்லையோ அரசாங்கம் பொறியியல் பீடத்தை ஆரம்பித்தே தீரும். நான் விரிவிரையாளனாக சேருறனோ இல்லையோ விரிவுரைகள் நடக்கத்தான் போகுது. பொறியியல் பீடம் தொடங்குவது நல்லதோ இல்லையோ எண்ட விவாதத்தை இப்ப கதைக்கிறது பொருத்தமில்லாத விசயம், இது பலருக்கு ஏன் விளங்குதில்லை?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhL5Oehr5ugi97uhsTEPMFqNJ68BGf6M4tWoAj5PmAEhNVJnvjsmA3uttAZ91ige_opHon7yoekbfyvY0Aq4z0gaLPZE3tKuBY8XV2zlXmHLCw0ZNj9LrN0_OPJgYAYp9yFpmaigH1GgC0t/s1600/efac.png" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="132" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhL5Oehr5ugi97uhsTEPMFqNJ68BGf6M4tWoAj5PmAEhNVJnvjsmA3uttAZ91ige_opHon7yoekbfyvY0Aq4z0gaLPZE3tKuBY8XV2zlXmHLCw0ZNj9LrN0_OPJgYAYp9yFpmaigH1GgC0t/s400/efac.png" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">பொறியியல் பீட கட்டட திட்ட வரைவு</td></tr>
</tbody></table>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொறியியல் பீடம் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசங்கம் மேற்கொள்கிறது. ஆரம்பிக்கப்படுவது உறுதியாகிவிட்டது. இதனை நானும் நீயும் வாக்குவாதப் பட்டோ, அறிக்கை விட்டோ நிறுத்த முடியாது எண்ட நிலைக்கு வந்து விட்டது. இப்ப நாங்கள் பார்க்க வேண்டியது, ஆரம்பிக்கப் பட இருக்கிற பொறியியல் பீடத்தை எப்பிடி முன்னிலைக்கு கொண்டு வருவது? அதுக்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அதனை நாங்கள் செய்கிறோமா என்பது தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வெறும் காணியைத் தந்து கட்டிடம் கட்டித் தரலாம், வசதிகள் செய்து தரலாம் இப்ப நீங்கள் பொறியியல் பீடத்தை தொடங்குங்கோ எண்டு அரசாங்கம் சொல்லி இருக்கிறது எண்டால், படிக்க வாற பிள்ளைகளை எப்பிடி பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்க வேண்டும்?, அவர்களுக்கு எங்களால் முடிந்தளவு சிறப்பான கற்கை நெறிகளை வழங்குவதற்கான வழிவகைகள் என்ன?, எப்பிடி அவர்களுக்கு நாங்கள் உதவி செய்ய முடியும் என்று சிந்திப்பதை அல்லது அது சார்ந்த விவாதங்களில் ஈடுபட்டு, அதன் மூலம் பெறும் சிறந்த வழிமுறைகளை கையாளுவதை விடுத்து, இப்பவும் பொறியியல் பீடம் தொடங்குவது பிழை எண்டு விவாதித்துக் கொண்டிருக்க முடியுமோ? ஏன் எங்கட சமூகம் கள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அந்த நேரத்துக்குத் தேவையான விடயங்களைச் சிந்திக்காமல் திரும்பத் திரும்ப பழசையே சொல்லிக் கொண்டிருக்கிறது எண்டு இன்னும் எனக்கு விளங்கவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொறியல்பீடம் ஆரம்பிப்பதில் சிக்கல்கள் இருக்கிறது என்பது எல்லாருக்கும் வெளிப்படையாகத் தெரிகிறது. முறையான கற்பித்தலை முதல் ஓரிரு வருடங்களுக்கு வழங்க முடியாத நிலை இருக்கிறது என்பதும் அதனை நானோ நீயோ கதைப்பதனால் நீக்கிவிட முடியாது என்பதும் பொறியியல் பீடத்தில் இணைந்து கொண்டுள்ள அனைத்து விரிவுரையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் தெளிவாக தெரியும். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் பிரச்சினை பிரச்சினை என்று ஒதுங்கி நிக்காமல் தெளிவாகத் தெரிந்த பிரச்சினையை துணிச்சலோடு எதிர்கொள்ளுவோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தை நம்பி வரும் மாணவர்களுக்கு எங்களால் முடிந்ததை அனைத்து தரப்பினரது உதவிகளோடும் முன்னெடுப்போம். அதற்கு ஏன் எங்கட சமூகம் ஒண்டு சேர்ந்து உதவி செய்ய முன்வரக்கூடாது?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் விரும்பிறனோ விரும்பவில்லையோ பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்படத்தான் போகிறது. நான் விரிவுரையாளனாகிறனோ இல்லையோ விரிவுரைகள் நடக்கத்தான் போகிறது. ஆரம்ப காலங்களில் மாணவர்கள் பாதிக்க்கப் படத்தான் போகிறார்கள். இவ்வளவும் வெளிப்படை உண்மைகள். இதை சொல்லிக் காட்டுவதற்கு ஒருவரும் தேவை இல்லை. இப்போது நாங்கள் சிந்திக்க வேண்டியது, கதைக்க வேண்டியது, மாணவர்களுக்கேற்படப் போகும் பாதிப்புகளை எப்பிடி குறைக்கலாம்? பாதிக்கப்படப் போகிற மாணவர்களை எப்பிடி பாதிப்புகளிலிருந்து மீட்க முடியும்? பொறியல்பீடத்தை எவ்வாறு முன்னிலைக்கு கொண்டு வரலாம்? இதை ஏன் இன்னும் எங்கள் சமூகம் (அனைவரையும் இங்கே குறிக்கவில்லை) புரிந்து கொள்ளவில்லை? ஏன் இன்னமும் பழைய, தற்காலத்திற்கு பொருந்தாத, செல்லாத கதைகளையே சொல்லிக் கொண்டிருக்கிறது?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
- தனஞ்சி.</div>
</div>
பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-17730510802630999982013-06-16T09:57:00.000+05:302013-06-16T11:59:14.525+05:30தாய்மடி தேடி..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இன்னும் நினைவிருக்கு...<br />
ஆரம்ப பாடசாலை நாட்களில் ஓர் நாள் பின்னேரம்..<br />
நான் ஏதோ ஒரு குழப்படி செய்து விட்டேன்.<br />
நான் குழப்படி செய்யுறதெண்டது புதினமில்லையே...<br />
இப்பிலிப்பில் தடி முறித்து சுழறச் சுழற அடிச்சீங்கள்<br />
கால்கள் முழுவதும் தழம்புகள்...<br />
வலி தாங்க முடியாமல் நான் அழுதேன்<br />
ஓடிப் போய் கட்டிலில் படுத்தபடி அழுதேன்...<br />
<br />
அரவணைக்க வந்தீர்கள்.<br />
தழம்புகளுக்கு வாயால் ஊதி ஒத்தடம் கொடுத்தீர்கள்<br />
நோகுதோ எண்டு கேட்டு பதறினீர்கள்...<br />
நான் அடிச்சது உன்னைத் திருத்தத் தான்...<br />
வேற ஒண்டுக்குமில்லை எண்டு என்னிடம் மண்டாடினீர்கள்<br />
என்னைத் தேற்றுவதற்காய் மாம்பழங்கள் வெட்டித் தந்தீர்கள்...<br />
அன்று முழுவதும் எனக்குப் பக்கத்திலேயே இருந்து<br />
என்னைப் பார்த்து பார்த்து மனம் வெந்தீர்கள்<br />
நோகுதோ நோகுதோ எண்டு எத்தினை முறை கேட்டீர்கள் எண்டு<br />
எனக்கு ஞாபகம் இல்லை..<br />
<br />
அடிச்சது வலிச்சதை விட நீங்கள் அழுதது தான் வலிச்சது<br />
என்னுடைய வலியை விட நான் அன்பு வைத்திருப்பவர்கள்<br />
என்னால் வேதனைப் படுவதைத்தான் என்னால்<br />
தாங்கிக் கொள்ள் முடியவில்லை..<br />
அன்றுதான் நான் திடமாய் முடிவெடுத்தேன்<br />
என்னுடைய வலி எவரையும் காயப்படுத்தக் கூடாது.<br />
எனக்கு எத்தனை வலிகள் இருந்தாலும் அதனை முயன்றளவு<br />
அன்பானவர்கள் முன்னிலையில் வெளிக்காட்டக் கூடாது<br />
<br />
ஆனாலும் உங்களிடம் நான் எப்போதும் தோற்றுவிடுகிறேன்<br />
என்னதான் நான் ஒழிக்க முயன்றாலும் கண்டு பிடித்துவிடுவீர்கள்<br />
கொஞ்ச நாளைக்கு முதல் கூட, என்ன முகம்<br />
வாடிக் கிடக்குது எண்டு கேட்டீர்கள்<br />
எங்க தான் உந்த வித்தையை கற்றுக் கொண்டீர்களோ...<br />
ஆறுதல் தேடி உங்களை நாடி ஓடி வருகிறேன்.<br />
<br />
- தனஞ்சி</div>
பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-28488030835621183462013-05-12T08:34:00.001+05:302013-05-12T08:34:48.706+05:30இருந்தாலும் நாங்கள் நண்பர்கள்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="text-align: justify;">
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளாந்த செயற்பாடுகளை இன்னும் இன்னும் சுலபமாக்குகிறது, வேகமாக்குகிறது என்றாலும் மனித உணர்வுகளை, உறவுகளை கொன்று புதைக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><u>மெய்நிகர் நண்பர்கள் (virtual friends) </u></b></div>
<div style="text-align: justify;">
முகப்புப் புத்தகம், கூகிள் பிளஸ் என்பவற்றின் வளர்ச்சி எங்கோ தொலை தூரத்தில் இருப்பவர்களை, எங்களோடு நீண்ட நாள் தொலைந்து போனவர்களை இணைப்பதற்கு பயன்பட்டாலும், நட்பு என்ற மனித உணர்வை மழுங்கடிக்கவே செய்கிறது. ஆரென்று முகம் தெரியாதவர்கள், முன்பின் தெரியாதவர்கள் கூட என் நண்பர்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் இண்டைக்கு படம் போட்டால் அல்லது நிலையை எழுதினாலோ (status update) பகிர்ந்து கொண்டாலோ (share) அதுக்கு அவன்/ அவள் வந்து விருப்பம் (like) தெரிவிப்பான்/ள். நாளைக்கு அவன்/ள் படம் போட்டாலோ அல்லது நிலையை மேம்படுத்தினாலோ பகிர்ந்து கொண்டாலோ நான் அதுக்கு விருப்பம் தெரிவிப்பேன். அல்லது கொஞ்சம் மேல போய் ஏதாவது கருத்து (comment) தெரிவிப்பேன். மாறி மாறி எங்களுக்கிடையில் இது ஒரு எழுதப் படாத ஒப்பந்தத்தினடிப்படையில் இப்பிடி நடந்து கொண்டிருக்கும். அவ்வளவு தான்... அதுக்கு பெயர் நாங்கள் இருவரும் நண்பர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு சிலர் மற்றவர்களை பொறாமைப் பட வைப்பதற்காகவே படங்களைத் தரவேற்றுவார்கள். நிலையை மேம்படுத்துவார்கள். உண்மையான அவர்களின் மன நிலையோ அல்லது சூழ்நிலையோ அவை பிரதிபலிப்பதில்லை. அப்பிடி மற்றவன் போட்டுட்டான் எண்டதுக்காகவே நானும் படம் போட்டு அவனுக்கு என்னாலையும் செய்ய முடியும் எண்டு காட்டோணும், அவன் வாங்கின விருப்பங்களின் எண்ணிக்கையளவு நானும் வாங்க வேணுமெண்டு நானும் அப்பிடியே செய்யுறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவன் ஒண்டு செய்தால் அதுக்கு ஒரு படி மேல போய் நானும் செய்து காட்ட வேணுமெண்டு செய்யுறது. உண்மையிலே அது எனக்கு தேவையா, எனக்கு பயனுள்ளதா என்றெல்லாம் சிந்திப்பதில்லை. எப்போதுமே நான் சந்தோசமா இருக்கிறேன் எண்டு மற்றவனுக்கு காட்ட வேணும் எண்டதுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறம். ஆனால் உண்மையில் சந்தோசமாக இருக்கிறேனா, நான் எனக்கு எது பிடிக்கும்: எது சந்தோசத்தை தரும் என்று தீர்மானித்து அதன் படி வாழ்கிறேனா என்று சிந்திப்பதில்லை. இவை எங்களையெல்லாம் ஒரு பொறாமை மனப்பாங்குக்கும், மற்றவர்களுக்கு படம் காட்டும் மன நிலைக்கும், மனித உணர்வுகளை மதிப்பதை குழி தோண்டிப் புதைக்கும் மன நிலைக்கும் இட்டுச் செல்கிறது என்பதை நாங்கள் உணரவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVTWiSF64paPJlOXLA0hVuu4thNhIfndNdqS6RNHafabIsdJI5mvkJO0dCTfuMrTl_Dc09KuZKMdGuxRYlpFFykUCqE79ZQ6JT7_B62WFuWnKEZ5CHMPx8X366FhNIomiK_UBONjNEnvOC/s1600/30012012082935-firstaid.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="188" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVTWiSF64paPJlOXLA0hVuu4thNhIfndNdqS6RNHafabIsdJI5mvkJO0dCTfuMrTl_Dc09KuZKMdGuxRYlpFFykUCqE79ZQ6JT7_B62WFuWnKEZ5CHMPx8X366FhNIomiK_UBONjNEnvOC/s320/30012012082935-firstaid.jpg" width="320" /></a></div>
<br />
<br /></div>
<div style="text-align: justify;">
நண்பனுக்கு ஒரு உதவி எண்டால் நேரடியாக சென்று என்ன வேணுமெண்டு கேட்டு செய்த நட்பு காணாமலே போகிறது. உரிமையோட உதவி கேட்க முடிந்த உதவி செய்ய முடிந்த காலத்தை நினைச்சுப் பாக்க மட்டும் தான் முடிகிறது. மச்சான் நான் சந்தோசமா இருக்கிறன் எண்டு அவன் உதடுகள் சொன்னாலும் அவன்ர முகத்தை பார்த்து அவன் மன உணர்வுகளைப் புரிந்து கொண்ட நட்பும் இருந்தது. மன பாரங்களை ஒரு நண்பனுக்கு எதிரே இருந்து சொல்லச் சொல்ல அவன் அதற்கு ஆறுதல் சொல்லித் தேற்றி இருந்த கவலை எல்லாத்தையும் போக்கின காலம் வாராமலே போய்விடுமோ? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முந்தியெல்லாம் நண்பனின் பிறந்த நாள் என்றால் வீடு தேடிப் போய் கொண்டாடுவோம். உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுவோம். இண்டைக்கு முகப்புப் புத்தகத்தில பிறந்த நாள் வாழ்த்து ஒண்டு போட்டால் போதும். அவனுடன் எங்களுடைய சந்தோசத்தை பகிர்ந்து கொண்டு விட்டோம் எண்ட திருப்தி எங்களுக்குள் ஏற்பட்டுக் கொள்கிறது. வெளியிடங்களிலிருந்து ஒருத்தன் நீண்ட நாளைக்குப் பிறகு வந்திருந்தால் அவனை நேரில போய் சந்திச்சு அவனோட எங்கட நேரத்தை செலவழிச்சு உணர்வுகளை, உள்ளக் கிடக்கைகளை பகிர்ந்து கொள்ளுவோம். இணடைக்கு அவன் வந்து நிக்கிறானம் எண்டால் ஓ.. முகப்புப் புத்தகத்தில பாத்தனான்... அவ்வளவுதான்... நேரில போக வேணும், சந்திக்க வேணும், சுகம் விசாரிக்க வேணும், நட்பை, உணர்வுகளை பகிர வேணும் எண்ட எண்ணம் தோன்றுவதில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மெய்நிகராக்கம் (virtualization) கணனித் துறைக்கு என்னவோ புதிய புரட்சியாக இருக்கலாம். பல பயன்களை தருவதாகக் கூட இருக்கலாம். மனித வாழ்க்கையில் மெய்நிகராக்கல் என்பது உணர்வுகளை, உறவுகளை மழுங்கடிக்கிறது. மனிதபிமானத்தை கொன்று புதைக்கிறது. மெய்நிகராக்கல் மேலைத் தேய கலாசாரங்களுக்கு பொருந்துவதாக இருக்கலாம், நிச்சயமாக எங்களுடைய, உறவுகளால் பிணைக்கப் பட்டு வாழ்கின்ற எங்களின் கலாச்சாரத்துடன் ஒத்துப் போகவேயில்லை. மனிதர்களை உணர்வுகளற்ற சடங்களாக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
- தனஞ்சி.</div>
</div>
பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-55135452008019383992013-04-13T18:03:00.000+05:302013-04-13T18:04:10.847+05:30கிணத்தில தண்ணியள்ளி..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="text-align: justify;">
பள்ளிக்கூடம் படிச்சுக் கொண்டிருந்த பதின்ம வயதுகளின் ஆரம்பத்தில் கிணத்தில தண்ணியண்ணிக் குளிச்சம். நாங்கள் சகோதரர் உறவுமுறையுள்ள (ஒரே வளவுக்குள் மூன்று வீடுகள்) அஞ்சு பேர் ஒரே கிணத்தில குளிச்சிட்டு பள்ளிக் கூடம் போகோணும். அத விட வேலைக்குப் போற மூண்டு பேரும் குளிக்க வேண்டும். ஆனாலும் ஒவ்வொருநாளும் எல்லாரும் குளிப்பம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எங்களுக்கிடையில் இருந்த ஒப்பந்தம் என்னண்டால் ஆர் முதல் கிணத்தடிக்குப் போகினமோ அவரே முதலாவதாகக் குளிக்கும் உரிமை உடையவர். குளிக்கும் உரிமையுடையவர் விரும்பினால் ஒத்துமாறல் அடிப்படையில் மாறிக் கொள்ளலாம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கிணத்தடியில் இடம்பிடிக்கிறதுக்கு சகோதரங்களுக்கிடையில் போட்டி. ஒரே நேரம் கிணத்தடியை நோக்கி ரண்டு பேர் வெளிக்கிட்டால் ஓடிப் போய் இடம் பிடிப்பம். ஓட்டப் போட்டி எண்டு வந்திட்டால் பெரும்பாலும் தங்கச்சிமார் என்னட்ட தோக்க வேண்டி வந்துடும். ஓடிப் போய் இடம் பிடிச்சிட்டு அவளைப் பாத்து “நான் தானே முதலாவது” எண்டு சொல்லி அவளை வம்புச் சண்டைக்கு இழுக்கிறதில ஒரு சந்தோசம். சிலவேளை எதிர்த்து வாதாடுவாள். சிலவேளை சின்னண்ணா என்னை முன்னுக்கு விடுங்கோ எண்டு கெஞ்சுவாள். கொஞ்ச நேரம் வம்பிழுப்பன். பிறகு அவளை முன்னுக்கு விட்டுடுவன். ஒருமுறை சண்டை உச்சக்கட்டத்துக்கு போய் இரு வீட்டுப் பெரியாக்களும் வந்து சமரசம் பேச வேண்டிய நிலையும் ஏற்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்ப அதே கிணறு இருக்கு. கிணத்தில குளிக்க ஆக்களில்லை. வயசு ஏறினதாலயும் மின்சாரம் வந்து வீட்டுக்குள்ளையே குளியலறை வந்ததாலையும் போட்டி இல்லை. கிணத்தில கையால தண்ணியள்ளிக் குளிக்கும்போது சொந்தக் கையால உழைச்சுச் சாப்பிடும் போது தோன்றும் பெருமிதம் தோன்றும். மூடிய அறைக்குள் நின்று கொண்டு குளிக்கும் போது ஏற்படாத சுதந்திரம், சந்தோசம் இயற்கையை ரசித்தபடி கிணத்தில குளிக்கும்போது ஏற்படுகிறது. கிணத்த படத்தில காட்டி இதுதான் கிணறு எண்டு பிள்ளையளுக்கு சொல்லிக் குடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
- தனஞ்சி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
</div>
பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-81079718324518608862013-02-08T21:23:00.001+05:302013-02-08T21:23:31.204+05:30வலிகளோடு வாழப் பழகிக் கொண்டேன்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
விதியா என்று சிந்திக்கத் தலைப்பட்டாலும்<br />
மனம் கலங்கி சிந்தனை சிதற மாட்டேன்.<br />
தன்னம்பிக்கை என் தாரக மந்திரம்.<br />
எல்லாம் வெல்லலாம். என்னால் முடியும்.<br />
<br />
எத்தடை வரினும் எதிர் கொள்வேன்.<br />
தோல்விகள் தொடர்ந்தாலும் தளரமாட்டேன்.<br />
விளைவுகள் எதனையும் ஏற்றுக் கொள்வேன்.<br />
வலிகளோடு வாழப் பழகிக் கொண்டேன்.<br />
<br />
- தனஞ்சி.<br />
</div>
பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-16330851226846448702012-04-01T22:38:00.009+05:302012-04-10T17:08:56.074+05:30ஊருக்குப் போனன்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div class="MsoNormal"></div><div class="MsoNormal">தாய்மடி என்னும் இந்த வலைத்தளத்தை நான் ஆரம்பித்து இன்றுடன் மூன்று வருடங்கள் முடிவடைகின்றன. இன்றைய நாளில் நான் வலைப்பதிவு எழுதுவதற்கு உதவிய அனைவரையும் நன்றியுடன் நினைவு கூருகிறேன். ஆரம்ப காலங்களில் அடிக்கடி எழுதி வந்தாலும் பின்னர் சோம்பல் காரணமாக எப்போதாவது எழுதி வந்தேன். அண்மைய நாட்களில் பதிவுகள் எதனையும் எழுதவில்லை. நான் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறேன் என தெரிவிக்கும் முகமாக மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களால் வெளியிடப்பட்ட சஞ்சிகளில் ஒன்றான சங்கமம் <span style="color: red;"><b>2008 </b></span>இல் இடம்பெற்ற என்னுடைய ஆக்கமொன்றை இங்கே பதிவிடுகிறேன்.</div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal">நன்றி</div><div class="MsoNormal">தனஞ்சி.</div><br />
<div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal" style="text-align: left;"><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;"><span style="font-size: 21px;"><br />
</span></span></div><span style="font-family: Bamini;"><span style="font-size: 21px;"></span></span><br />
<div style="text-align: justify;"><span style="font-family: Bamini;"><b><u>ஊருக்குப் போனன்…</u></b></span></div><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;"><br />
</span></div><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;">ஊருக்கு புறப்படுவதற்குக் கொஞ்ச நாட்களுக்கு முன்னரே தமிழர் தலைநகர நண்பர்களின் உதவியுடன் கப்பலுக்கான முன்பதிவுகளை மேற்கொண்டோம். அவர்களின் வீடுகளிலேயே தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்துகொண்டு பெரிய எடுப்பில் பயணத்தை மேற்கொண்டோம். ஐந்து மணிக்கு பல்கலைக்கழகம் முடிந்ததும் தங்குமிடம் வந்த பின்னர் திடீரென முடிவெடுத்து வீடுகளுக்குச் சொல்லாமலே இரவு ஒன்பது மணிக்கு வாகனமேறி, மதியம் ஒரு மணியளவில் வீடுகளுக்கு போய்ச் சேர்ந்து, குடும்பத்தினர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த காலங்களையும் நான் எண்ணாமலில்லை. தங்குமிடத்தில் இருவர் ஊருக்குப் போகிறார்களென்றால் மற்றவர் நிச்சயமாக ஊருக்குப் போக வேண்டிய கட்டாயம். அந்தளவுக்கு அலுப்படிச்சு ஊர் நினைப்புகளைச் சொல்லி உசுப்பேத்தி ஒரு மாதிரி அவரையும் ஊருக்குப் புறப்படும் வழி பண்ணிவிடுவோம். இப்போது புறப்படவேணும் எண்டு நினைத்தால் எத்தனை ஆயத்தங்கள்.. அப்பாடா..</span></div><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;"><br />
</span></div><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;">தமிழர் தலைநகரத்து நண்பர்களின் சிறந்த வரவேற்போடும் உபசரிப்போடும் நான் முதன்முதல் அந்நகரத்தில் காலடி எடுத்து வைத்தேன். தலை நிமிர்ந்து நடக்கவேண்டிய தலைநகரத்து மக்கள் அடுத்த பரிசோதனை நிலையம் எங்கே என்று பார்ப்பதற்காய் தலையை நிமிர்த்துகிறார்கள். ஐம்பது மீற்றர்களுக்கு ஒரு முறை நாங்கள் வழிமறிக்கப்பட்டு பரிசோதிக்கப்படுவதைப் பார்க்கும் போது அந்த அரணிலும் இந்த அரணிலும் நிற்பவர்கள் ஒருவருக்கொருவர் கோபமோ என எண்ணத்தோன்றுகிறது. இலங்கை அரசாங்கத்தின் பாரம்பரியமான காலம் தாழ்த்தி நிகழ்வுகளை நடத்தல் எங்களின் கப்பல் பயணத்திலும் நடந்தது. ஒரு நாள் கப்பல் தாமதமானது நகரைச் சுற்றிப்பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.</span></div><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;"><br />
</span></div><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;">கன்னியாவுக்கு காலை ஆறு மணிக்கு வாகன சகிதம் எங்களால் முன்னெடுக்கப்பட்ட பயண நடவடிக்கை கேவலம் இரண்டு மரக்குற்றிகளால் வழிமறிக்கப்பட்டது. தொடர்ந்து முன்னேறும் முயற்சி பயனளிக்காததால், அங்குள்ளவர்களுடன் களநிலவரங்கள் பற்றி கலந்துரையாடி, எங்களுக்கான சாதக பாதக தன்மை பற்றி சிந்தித்துக் கிடைக்கப்பெற்ற நம்பகமான தகவல்களின் அடிப்படையில் அடுத்த முயற்சி முற்பகல் ஒன்பது மணியளவில் மேற்கொள்ளப்பட்டது. தருணம் பார்த்துக் காத்திருந்து, சிறந்த வழிகாட்டலின் கீழ் நிகழ்த்தப்பட்ட பயணம் வெற்றி இலக்கை அடைந்தது. ஏழு கிணறுகளிலும் குளிப்பதில் நம்மவர்கள் காட்டிய அவசரத்தில் வெற்றிக்களிப்பு மட்டுமல்ல கொழும்பில் காணப்படும் தண்ணீர்ப் பஞ்சமும் வெளிப்படையாகவே தெரிந்தது. தொடர்ந்து கோணேச்சரர் கோவிலுக்கு, அமைதியான இயற்கைச் சூழலையும் மான் மயில்களையும் ரசித்த படியே சென்றடைந்தோம். பழைய ஐதீகக்கதைகளை சொல்லிய படியே இரட்டைப் பாறைகளுக்கிடையே கல்லெறிந்ததையும் மறக்க முடியாது. இயற்கையாய் அமைந்த ஆலய சூழலில் ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தியமை மனதுக்கு இதமாய் இருந்தது. எம்மை நன்கு உபசிரித்த நண்பர்களிடமிருந்தும் குடும்பத்தினரிடமிருந்தும் விடைபெற்று கப்பலுக்கு புறப்பட்டோம். கப்பலில் நாங்கள் ஏறிவிட்டோம். ஆனாலும் இன்னும் புறப்படவில்லை. எப்பாடா இது வெளிக்கிடும் என்று சலிப்பு மேலோங்கியபோது என் எண்ணங்கள் பழைய நிகழ்வுகளில் இதே போன்ற சந்தர்ப்பங்களை நாடியது.</span></div><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;"><br />
</span></div><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;">ஏ - 9 வீதி திறந்திருந்த அந்த காலங்களில் கொழும்பிலிருந்து இரவு ஒன்பது மணியளவில் வெளிக்கிடும் வாகனங்கள் அடுத்தநாள் காலை நாலு மணி முதல் ஐந்து மணிக்குமிடையில் தாண்டிக்குளத்தில் பாதை திறப்பதற்காக தரித்து நிற்கும். பாதை காலை ஆறரைக்கு திறக்கும் வரை வாகனத்தை விட்டிறங்கி சுற்றிப்பார்ப்போம். விடுமுறை நாட்களில் காணப்படும் பெரிய வாகன வரிசையில் எங்களுக்கு தெரிந்தவர்களை கண்டுபிடித்து கதைப்பதில் ஒரு அலாதிப்பிரியம். ஆரார் ஊருக்கு போகிறார்கள் என்பதைக் கண்டறிந்து விடுவோம். முகத்தை கழுவிக்கொண்டு தேத்தண்ணி குடிக்கத் தேத்தண்ணிக் கடைக்குப் போனால் அங்கு சூரியன் வானொலி பெரிதாக ஒலிக்கும். "தங்கச் சூரியனே பொங்கும் எரிமலையே" என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தேத்தண்ணி குடிச்சதாக ஞாபகம். குடிச்சுட்டு வெளிக்கிட நேரம் சரியா இருக்கும். உடன நாங்கள் வந்த வாகனத்தில் இருந்து இறங்கி ஆக முதல் நிற்கும் வாகனத்துக்கு போவம். கொஞ்சக் காசு கூடக் குடுத்தாலும் முதலாவதாக வீட்ட போகவேணும் எண்ட போட்டியால ஓட்டம் தான். வேகமா விண்ணப்பப் படிவங்கள் நிரப்ப வேணும் எண்டதுக்காகவே எங்களுடைய தேசிய அடையாள அட்டை இலக்கங்களை மனப்பாடம் பண்ணியதையும், நாங்கள் கம்பஸ் எண்டு பெருமையடிச்சு சலுகைகள் பெற்றுக்கொண்டு மற்றையவர்களை விடவும் முன்னுக்கு போகவும் பின்னிற்பதில்லை. இப்ப கப்பல் மெதுவாக ஆட்டம் கண்டது. கப்பல் வெளிக்கிட்டதை உணரக்கூடியதாக இருந்தது.</span></div><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;"><br />
</span></div><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;">கப்பல் தரை காணாத்தூரம் செல்லும் வரை மேல் தளத்தில் இருந்தபடி கரையில் தெரியும் வெளிச்சத்தை பார்த்தபடியும், கப்பல் கடலை கிழிக்கும் விதத்தினையும், ஆனாலும் கப்பலை முத்தமிடும் அலைகளையும் ரசித்தபடியே சென்றேன். நள்ளிரவு வேளையில் மெதுவாகப்பசி கண்டது. வாய்க்கு ஏதாவது கிடைக்குமா எனப் பார்க்க கீழ்த்தளத்துக்கு போனேன். என்னோட வந்த எல்லோரும் நல்ல நித்திரையில் இருந்தார்கள். அதிலொருத்தன் கப்பல் இயந்திர சத்ததை விடப் பெரிய சத்தமாக குறட்டை விட்டதை மறக்கவா முடியும். ஒவ்வொருத்தனின் பைகளுக்குள்ளும் கையை விட்டேன். ஒருமாதிரி இரண்டு அப்பிள் பழம் அகப்பட்டது. அதுவும் கொஞ்ச நேரத்திற்குள்ளேயே எனக்குள் சமர்ப்பணமாகியது. (என்ன பிரச்சனையெண்டால் நான்தான் அந்த அப்பிளை சுட்டதெண்டு இதுவரை ஒருத்தனுக்கும் தெரியாது. இதை அவங்கள் வாசிச்சாங்களெண்டால் பிரச்சனை பெரிசானாலும் பெரிசாகலாம்.) காலை வேளையில் கப்பல் தரை தட்டுது தட்டுது என்றால் எங்கே கரையைத் தொட்டது. நீண்ட நேரப் பயண வெறுப்பின் உச்சம் எங்களுடைய வார்த்தைகளிலும் தெரிந்தது. ஆனாலும் தரை தட்டிவிட்டோம் எண்ட உற்சாகம் மேலாகவே காணப்பட்டது.</span></div><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;"><br />
</span></div><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;">அன்று இரவோடிரவகவே உயிரையும் பணயம் வைத்து வீடுகளுக்கு போய்ச்சேர்ந்தோம். பயண சலிப்பை வண்டியினுள் ஒலித்த பாடல் மறக்கச்செய்தது. அங்கு தனியார் வண்டிகளில் பயணிக்கும் போது ஒலிக்கும் பாடல்களின் தெரிவே வித்தியாசமானது. அவை பயணத்துக்கு தனி சுகம் சேர்ப்பவை. மெல்லிய சோகம் இழையோடும் நல்ல அர்த்தமுள்ளஇ சூழ்நிலைக்கு தகுந்தாற்போன்ற பாடல்களைக் கேட்ட படியே பயணம் செய்யும் போது பயணத்திலுள்ள சலிப்பு முதல் வீட்டுப் பிரச்சனை வரை அனைத்தையும் மறந்து பயணம் செய்வது அமைதியானது. எங்கிருந்து தான் இப்படிப் பொருத்தமான பாடல்களை தேடிப்பிடிப்பார்களோ என்று நான் அடிக்கடி சிந்திப்பதுண்டு. பிற்காலத்தில் அரசாங்கப் போக்குவரத்து வாகனங்களிலும் மக்களைக் கவர்வதற்காக அதே தெரிவுப் பாடல்களை ஒலிக்க விட்டதிலிருந்து நம்மவர்களை அத்தகைய பாடல்கள் எந்தளவுக்குக் கவர்ந்துள்ளது என்பதை உணரலாம். ஏன் எங்களுடைய கணணிகளில் கூட அத்தகைய தெரிவுகளென ஒரு தொகுதி பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளதை மறக்கவா முடியும்.</span></div><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;"><br />
</span></div><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;">இயற்கை எழில் கொஞ்சும் மரங்களால் சூழப்பட்ட எமது வீடுகளையும், எம்மைக் கண்டதும் துள்ளிக் குதித்து சொந்தம் கொண்டாடிச் சந்தோசமாக வரவேற்கும் செல்லப்பிராணிகளையும், பூத்துக்குலுங்கி நறுமணத்தைப் பரப்பியபடியே அழகைத்தரும் பூமரங்களையும், தேவையறிந்து ஓடிவந்து தோள் கொடுக்கும் அயலவர்களின் அரவணைப்பையும், அமைதியான சூழலில் எம்மையெல்லாம் காத்து நிற்கும் தெய்வ சந்நிதானங்களையும், மிதிவண்டிகளில் உலாவரும் சின்னஞ்சிறார்களையும், ஊருக்கே சோறு போடும் உழவர்களையும், கண நேரம் ஓய்வெடுக்காது உழைப்பால் சிவந்த கைகளையும், கலாசாரம் பேணும் பொருத்தமான குடும்பப்பாங்கை கண்முன் காட்டும் உடைகளை அணிந்தவர்களையும், யார் வந்து எதிர்த்தாலும் கட்டிக்காக்கப்படும் விழுமியங்களையும், பறையுடனான காவடிகளையும், உடுக்குடனான கரகங்களையும், என்றும் மறவாத யாவரையும் உபசரித்து விருந்துண்ணக் கொடுக்கும் பழக்கங்களையும், ஒருவேளை உணவில்லையெனினும் மானத்தோடு மனிதத்தையும் இழக்காத மனிதர்களையும் பார்க்கும் போது நிச்சமாக சொல்லுகிறேன் அது தான் சொர்க்கம்.</span></div><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;"><br />
</span></div><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;">மகிழ மரச் சோலையிலே இருக்கை போல் வடிவமைந்த கல்லிலே படுத்திருந்தபடி ஊர்க்கதைகள் உலகக் கதைகள் குடும்பச் சண்டைகள் சமகால அரசியல் மற்றும் காதல் விவகாரங்களை அலசுவதில் கிடைக்கும் தனி சுகம் வேறெங்கும் கிடைப்பதில்லை. அப்பப்ப கோயிலில் நடக்கும் பூசை அபிஷேகங்களில் கிடைக்கும் சோறு, “கோட்டா” மோதகங்களைப் பகிர்ந்துண்டபடியே இன்பமாய், ஒற்றுமையாய் ஒரே குடும்பம்போல மடத்தில் கூடிக்குலவியதை மறக்கவா முடியும்? மிதி வண்டிகளில் கடந்து செல்லும் நம்ம ஊரிளம் பெண்கள் முதலில் என்னை வித்தியாசமாகப் பார்த்தாலும் அடையாளம் கண்டு கொண்டதும் வழமையான பாணியில் கடைக்கண் பார்வையுடனும் தலைகுனிந்த வெட்கப் புன்னகையுடனும் கடந்து சென்றார்கள். பூங்காவனத்து மணலிலிருந்தபடியே கடந்து செல்லும் பெண்களுக்கு அடித்த நக்கல்களையும் நையாண்டிகளையும் மறந்திருக்க மாட்டார்கள்தானே. ஊரில் நடக்கும் கல்யாணவீடு முதல் செத்தவீடு அந்தியேட்டி வரை அனைத்து வைபவங்களுக்கும் இளைஞர்கள் சார்பில் பங்குபற்றி தேவையறிந்து உதவி செய்வதையும் சிறப்பாக சபை நடத்தி ஒற்றுமையாய் உணவுண்டு மகிழ்வதையும் நான் மறக்கவில்லை.</span></div><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;"><br />
</span></div><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;">ஆனாலும் பழைய சந்தோசங்கள் போல இம்முறை இருக்கவில்லை. எந்நேரமும் என்னுடன் சண்டை பிடித்துக் கொண்டே நகைச்சுவையுடன் கதைத்து விளையாடி மகிழ்ந்த சகோதரர்கள் வீட்டிலில்லை. எல்லா வயதினரும் உலா வந்த வீதிகளில் வயது முதிர்ந்தவர்களும் சின்னஞ்சிறார்களுமே வலம் வருகிறார்கள். என் வயதையொத்த இளைஞர்கள், என்னுடன் படித்த நண்பர்களைக் காண முடியவில்லை. பழைய காலப் பள்ளி வாழ்க்கையை மீட்டிப்பார்க்கத் தோழர்களில்லை. சிறுவயதினர் என்னை “அண்ணா”என அழைக்கும்போது பெருமையாயிருந்தாலும் “டேய்” எனக் கூப்பிட்டு என்னை ஆட்டுவிக்கும் அன்புக் கட்டளைகள் இல்லாதது கவலையைத் தருகிறது. ஒரு காலத்தில் நாங்கள் ஓடி விளையாடிய நண்பர்களின் வீடுகள் நிழல் தரு மரங்களின் இலைகளாலும் செடி கொடிகளாலும் நிரம்பிப் பாழடைந்து கிடக்கிறது. வீடுகளை அழகு படுத்த இளையவர்கள் இல்லாதது ஒவ்வொரு வீடுகளிலும் காணமுடிகிறது. பள்ளிக்கூடம் போகும் மாணவர்களின் மனங்களிலே எதிர்காலம் இருண்டு கிடக்கிறது. நாளை விடியும்போது நானிருப்பேனா என்ற சந்தேகத்துடன்தான் ஒவ்வொரு நாளும் விடிகிறது. பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் இல்லை. படிப்பதற்குகந்த நேரங்கள் தவிர்ந்த நேரங்களில்தான் மின்சாரம் கிடைக்கிறது. கைத்தொலைபேசி சமிக்ஞைகளோ நானுமிருக்கிறேனென அமாவாசைக்கொருமுறை தோன்றி மறையும்.</span></div><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;"><br />
</span></div><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;">விசிலடித்ததும் தங்கள் வாகனத்தை விட்டிறங்கி யாவரும் நின்ற இடத்திலேயே குறைந்தது இரண்டு மணி நேரமாவது நிற்க வேண்டிய “பாதை மறிப்பு” நம்மவர்களைப் பாடாய்ப் படுத்துகிறது. நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தினுள் திட்டமிட்டு எதனையும் செய்ய முடிவதில்லை. மச்சான் ஒருத்தியும் மாட்டுறாளில்லையெண்டால் பேசாமல் பாதைமறிப்பில் போய் நில். பக்கத்தில நிக்கிறவளிட்டை பேச்சுக்குடு. பாதை மறிப்பு முடிய நீங்கள் ரெண்டு பேரும் புதுச்சோடிகள் தான்டா. அந்தளவுக்கு கதைக்கிறதுக்கு நேரமும் கிடைக்கும் அதைவிட அவளுக்கும் வேற பொழுது போக்குமிருக்காது. நீ ஆட்டையைப்போட்டு விசயத்தை வெண்டிடலாமெண்டு நண்பர்கள் நகைச்சுவையாய் சொல்லுவார்கள். பாதை மறிப்பு விவகாரத்தால் உயர்தரப் பரீட்சை எழுதமுடியாமற் போன சந்தர்ப்பங்களும் கல்யாண வீடுகள் காலம் தப்பி நடந்த சந்தர்ப்பங்களுமுண்டு.</span></div><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;"><br />
</span></div><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;">இத்தனையுமிருந்தென்ன, எந்தத் தடைகள் வந்தாலும் ஒவ்வொரு முறை வீழுகின்ற போதும் எழுந்து நிற்கும் வல்லமை படைத்தவர்கள் நம்மவர்கள். வீழ்வது அவமானமல்ல, ஒவ்வொரு முறை வீழும்போதும் தலை நிமிர்ந்து எழுந்து நிற்கிறோம் என்பதுதான் பெருமை. எத்தனை வழிகளில், யூத்தமென்ற போர்வையில் எம்மை அடக்க முயன்றாலும், அழிக்க முயன்றாலும் சாம்பலிலிருந்தும் எழுந்து நிற்கும் பீனிக்ஸ் பறவைகள் நம்மவர்கள். எத்தனை பொருளாதாரப் பிரச்சனைகளையும் நெருக்கடிகளையும் கொடுத்தாலும் தளர்ந்து விடாது வளைந்து கொடுத்து அன்றாட வாழ்வை நடாத்துபவர்களும் அவர்களே. இதற்குச் சீதனம் என்ற போர்வையில் எம்மவர்கள் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்துக் கட்டிக்காத்த பணமும் பொருளுமே காரணமென்றால் அது மிகையாகாது. இல்லையேல் நம்மவர்கள் பட்டினிச் சாவால் துடித்துச் சாவடைந்திருப்பார்கள். தமிழனென்றொரு இனம் நம்மூரில் மண்ணோடு மண்ணாய்ப் போயிருக்கும்.</span></div><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;"><br />
</span></div><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;">பெற்றோலுக்குப் பதிலாய் மண்ணெண்ணெயில் வாகனமோட்டியவர்களுக்கு, மிதிவண்டியைச் சுற்றி மட்டைப்பந்துப் போட்டி பார்த்தவர்களுக்கு, சுண்ணாம்பினால் கட்டிடிடம் கட்டியவர்களுக்கு, குண்டும் குழியுமான திருத்த முடியாத வீதிகளிலும் இலாவகமாக வாகனமோட்டக் கற்றுக் கொண்டவர்களுக்கு, ஆகாயத்தில் பறப்பது முதல் ஆழ்கடலினாழத்தில் பயணிப்பது வரை அனைத்துத் தொழில்நுட்பங்களையும் கற்றுத்தேர்ந்தவர்களுக்கு, ஏன் பல்குழல் குண்டுகளின் மேலுறைகளையே பூச்சாடியாக்கி அழகு பார்த்தவர்களுக்கு, குண்டுச்சத்தங்களுக்கும் குழல்களினதிர்வுகளுக்குமிடையேயும் வாழ்ந்தவர்களுக்கு, செங்குருதியுறைந்த மண்மேலே நடக்கப் பழகிய நம்மவர்களுக்கு வாழவா கற்றுக் கொடுக்க வேண்டும்? தன்மானத்தோடும் சுய உரிமை காக்கும் அதிகாரத்தோடும் வாழுவோமென்ற வெறி இருக்கும் வரை, எம்மால் முடியுமென்ற நம்பிக்கையிருக்கும்வரை எதையுமெதிர்கொள்ளும் வீரமிருக்கும்வரை தமிழன் வாழ்வும் நிலைத்திருக்கும். வரலாற்றில் தடம் பதிக்கும்.</span></div><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;"><br />
</span></div><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;"><br />
</span></div><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;">ச. தனஞ்ஜெயன்</span></div><div style="text-align: justify;"><span style="font-family: Bamini;">மட்டம் 03</span></div></div></div>பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-32952185264750841742011-12-28T15:58:00.001+05:302011-12-28T16:12:28.131+05:30நள்ளிரவில்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சொய்சாபுரத்தில இருந்த காலத்தில ஒரு நாள் இரவு, கிட்டத்தட்ட அதிகாலை பன்னிரண்டு முப்பது மணியிருக்கும். சூடான கதை ஒண்டு கதைச்சுக் கொண்டிருந்ததால நாங்கள் நித்திரை கொள்ளேல்ல. திடீரெண்டு ஆரோ ஓடி வாற சத்தம்... எங்கட கதவைத் தட்டுற சத்தம்... ஓடிப் போய் முதலாம் மாடியிலேந்து குதிக்கிற சத்தம்... நாங்கள் குழம்பிப் போனம். என்ன நடக்குதெண்டு விழங்கேல்ல...</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">கொஞ்ச நேரத்தில எங்கட வீதியால ரண்டு பேர் ஓடி வந்தாங்கள். சிங்களத்தில “கொட்டி... கொட்டி...” (தமிழ்ல புலி.. புலி..) எண்டு சத்தம் போட்டுக் கொண்டு.. சமாதானம் செத்துக்கொண்டிருந்த காலம் எண்ட படியா பொடியள் ஆரையும் துரத்திக் கொண்டு வந்தவங்களோ? அவன் ஏன் வந்து எங்கட வீடுக் கதவைத் தட்ட வேணும்? எங்களுக்கு மெல்ல பயம் பிடிக்கத் தொடங்கிச்சுது. மெல்லமா எங்கட வீட்டு விளக்குகளை அணைச்சுப் போட்டு சன்னலோட ஒட்டி நிண்டு என்ன நடக்குதெண்டு பாப்பம் எண்டு யோசிச்சம். திடீரெண்டு கன சனம் எங்கட வீதியில கூடீட்டுது. கொட்டி கொட்டி எண்டு சொல்லிக் கொண்டு எங்கட வீட்டை கை காட்டி கதைக்கத் தொடங்கினம். எங்களுக்கு மெல்ல நடுங்கத் தொடங்கீட்டுது. பொலிஸ் வந்தால் எங்கள் எல்லாரையும் உள்ளுக்குக் கொண்டு போய்ப் போடப் போறான் எண்ட நிலை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">திடீரெண்டு ”ராமு (அனைவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) வாடா.. நான் சோமு சொல்லுறன். ஒரு பயமுமில்லை. வெளீல வாடா” எண்டு பலமா சத்தம் போட்டுக் கேட்டுது. இந்தக் குரல் எங்கட சிரேஸ்ட மாணவர் அண்ணா ஒருத்தருடையது. ராமு எங்கட மட்டத்தைச் சேர்ந்தவன். அவங்கள் ரண்டு பேரும் ஒரே வீட்டில இருக்கிறவங்கள். ஆனால் எங்கட வீட்டிலேந்து கிட்டத்தட்ட 600 மீற்றர் தூரத்தில இருக்கிறவங்கள். அவங்கள் ஏன் எங்கட வீதிக்கு தலை தெறிக்க ஓடி வரோணும்? சோமு ஏன் எங்கட வீடுப் பக்கம் வந்து பிறகு எங்கேயோ ஓடி ஒழிக்கோணும். ஒண்டுமே புரியேல்ல. வீதி முழுக்க சனம் ஓடித் திரியுது. சிங்களத்தில புலி புலி எண்டு சொல்லுறாங்கள்.எங்கட வீட்டைக் காட்டியும் கதைக்கிறாங்கள். கொஞ்ச நேரம் ஆடிப் போனம். வெளீல போய் நடந்தது என்ன எண்டு விசாரிக்க விரும்பேல்ல. பிடிபட்டால் உள்ளுக்குள்ள தான். உள்ளுக்குள்ள போட்டா ஆள் இருக்குதோ இல்லையோ எண்டும் தெரியாது, எப்ப வெளீல விடுவாங்கள் எண்டும் தெரியாது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அந்த நேரத்தில எங்களுக்கு தெரிஞ்ச, அந்த நண்பர்களின்ர அறையிலேந்த இன்னுமொரு அண்ணாக்கு அழைப்பு எடுத்தம், ”கொஞ்சம் பொறுத்தெடு” எண்டுட்டு அந்த இணைப்புத் துண்டிக்கப் பட்டது. எங்கட வீதியில வாகன சத்தம் கேட்டது. மெதுவா எட்டிப் பாத்தம் வீதி வெளிச்சத்தில இவங்கள் ரண்டு பேரும் வாகனத்துக்குள்ள ஏத்தப் படூறது தெரிஞ்சது. நிலமை கவலைக்கிடம். திருப்பியும் அந்த அண்ணாக்கு அழைப்பெடுத்தம். இப்ப அவர் இணைப்பில இருக்கிறார். அவர் எதுவுமே பேசவில்லை. சிங்களத்தில சரமாரியாக உரையாடிக் கேட்குது. வாகனமும் ஓடிக் கொண்டிருக்கிற சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அழைப்பு துண்டிக்கப் பட்டது. அந்த அண்ணாவும் வாகனத்தில் ஏற்றப்பட்டதை உணர்ந்து கொண்டோம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அவர்களிருந்த வீட்டுக்கு பக்கத்தில இருந்த இன்னுமொரு அண்ணாக்கு அழைப்பெடுத்தம். நேற்று புதுசா எங்கட வீட்டுக்கு பக்கத்தில குடியிருக்க வந்த அண்ணன்மார் இருவரின் வீட்டில ’குடு’க்காரர் வந்து நிக்கிறாங்களாம். (போதை வஸ்து பாவிப்பவர்கள், அப்பப்ப வழிப்பறி களவுகளிலும் ஈடுபடுபவர்கள்). அவங்களுக்கு பயமா இருக்கெண்டு சொன்னதால தாங்கள் என்னண்டு பாக்கப் போறம் எண்டு தனக்குச் சொன்னவை எண்டு சொன்னார். இப்ப என்ன செய்யுறது. நடந்தது என்னண்டும் தெரியேல்ல... </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">எங்களுக்கு அந்த நேரத்தில வந்த யோசினை மொறட்டுவைப் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு இதனைத் தெரியப்படுத்துறது. அந்த ராத்திரி நேரத்தில் (அதிகாலை 1 மணியிருக்கும்) அவருடைய தொலை பேசிக்கு அழைப்பு எடுத்தம். துணை வேந்தர் அழைப்புக்கு பதில் சொன்னார். எங்களுக்கு தெரிந்த விடயங்களை தெரிந்த ஆங்கிலத்தில் சொன்னோம். வாகனத்தில் ஏத்திக் கொண்டு போனதையும் அவர்களுடைய தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டதையும் சொன்னோம். அவர் சொன்னார் இன்னும் ஐந்து நிமிடத்தில் எம்முடன் மறு படியும் தொடர்பு கொள்வதாக... சிறிது நேரத்தில் துணைவேந்தர் எங்களுடைய தொலைபேசிக்கு அழைத்து சொன்னார் அவர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் பிடிக்கப்பட்டு கல்கிஸ்ஸை காவல் நிலையத்தில் இருக்கிறார்கள். விசாரணை முடிந்ததும் விடுவிக்கப்படுவார்கள். நீங்கள் ஒண்டும் பயப்படத் தேவையில்லை. அந்த நேரம் கெட்ட நேரத்திலும் மொறட்டுவைப் பல்கலைக்கழக துணை வேந்தர் எங்களுக்கு உதவினார் எண்டு சொன்னால் நம்ப முடிகிறதா? </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">பொலீஸ் பிடித்தார்களா? அப்படியானால் ஏன் இவர்கள் ஓடினார்கள்? </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அன்று நடந்தது என்ன?</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நாங்கள் இருந்த பகுதி குடுக்காரர்களுக்கு பிரசித்தமானது. முதல் நாள் எங்களுடைய வீட்டுக்கு அண்மையில் குடி வந்த அண்ணன்மார்களுக்கு குடுக்காரர்களைப் பற்றி தெரிந்திருந்தது. அன்றைய நாள் பகல்வேளை அவர்கள் கணனி ஒன்றை வீட்டுக்கு கொண்டு வரும்போது வீட்டுக்கு முன்னால் ஓரிருவர் சந்தேகத்துக்கிடமாக நடமாடியிருக்கிறார்கள். தங்களுடைய வீட்டை நோட்டம் விட வந்த குடுக்காரர் எண்டு அவர்கள் நினைத்து விட்டார்கள். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அண்டைக்கு இரவு பொலீஸ் சிவில் உடையில் சோதனையிட அவங்கட வீட்டுக்கு வந்திருக்கிறாங்கள். அவங்கள் வந்து வீட்டுக் கதவைத் தட்டினதைப் பாத்து வந்தது குடுக்காரர் எனப் பயந்து, பொலீசில் பிடிபட்ட அண்ணாக்கு அழைப்பெடுத்து உதவிக்கு வரும்படி கேட்டிருக்கிறார்கள். அவர் தன்னுடைய அறை நண்பர்கள் நால்வரையும் கூட்டிக்கொண்டு இவர்களுக்கு உதவிக்காக நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் புறப்பட்டு வந்திருக்கிறார். வந்த இடத்தில் சிவில் உடையில் நின்ற பொலீஸ் இவர்களை மறித்திருக்கிறான். வந்தவர்களும் மறிப்பது குடுக்காரர் என நினைத்து தப்புவதற்காக ஓடினார்கள். இதுதான் நடந்தது. பொலீஸ் துரத்தி பிடிச்சு கிட்டத்தட்ட ஒரு கிழமைக்குப் பின்னரே அவர்களை விடுவித்தனர். படிக்க வந்து கொஞ்ச நாள்ல நடந்த இந்த சம்பவமும் மறக்க முடியாதது.<br />
<br />
- தனஞ்சி</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div></div>பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-10494149230669702552011-12-22T14:03:00.000+05:302011-12-22T14:03:55.826+05:30தண்ணிக் காசு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div style="text-align: justify;">நாங்கள் இருந்த சொய்சாபுர வீட்டின்ர நீர் மானி எங்கட வீட்டுக்குள்ளேயே இருந்தது. அதனால நீர்மானி வாசிப்பாளர் எங்கட வீட்டுக்குள்ள வந்துதான் நீர்மானியை வாசிச்சு கட்டணம் அறவிட வேணும். நாங்கள் பாவிச்ச நீருக்கான கட்டணம் பாவிச்ச அலகுகளை அடிப்படையாகக் கொண்டது. முதல் 15 அலகுக்கும் 50 ரூபா, 15 - 20 அலகு பாவிச்சிருந்தால் 80 ரூபா அளவில வரும். 20-25 அலகு பாவிச்சிருந்தால் 250 ரூபா அளவில வரும். எப்பிடியும் இந்தக் கட்டணத்தை 100 ரூபாக்குள்ள கட்டுப்படுத்தியே ஆக வேணும் எண்டு யோசிச்சம். குளிக்காம இருக்கிறது சிறந்த தீர்வெண்டாலும் அதனால மற்றாக்களும் பாதிக்கப்படுவினம் எண்டதால என்ன செய்யலாம் எண்டு யோசிச்சம். அப்பத்தான் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின்ர வழமை ஒண்டைக் கண்டு பிடிச்சம். அத எங்களுக்கு சாதகமா பயன்படுத்திறதெண்டு முடிவெடுத்தம். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நீர்மானி வாசிப்பவர் வீட்டுக்குள்ள வந்து வாசிப்பை வாசிக்க முடியாமல் போனால் கடைசி மாதம் என்ன கட்டணம் வந்ததோ அந்தக் கட்டணத்தைத் தான் இந்த மாதக் கட்டணமாக அறவிடுவார். அப்ப ஒரு மாதம் மிகக்குறைஞ்ச கட்டணத்தை பதிவு செய்து போட்டு அடுத்த மாதத்திலேந்து அவரை உள்ள விடாமல் கதவைப் பூட்டி வச்சிருந்தால் அவர் பழைய கட்டணத்தை பதிவு செய்வார். நாங்கள் குறைஞ்ச கட்டணம் கட்டலாம். ஏன் நாங்கள் இப்பிடி செய்யத் துணிஞ்சனாங்களெண்டால் பெரும்பாலும் நாங்கள் ஊரில தான் நிக்கிறது. பெயர் தான் கம்பஸில படிக்கிறமெண்டு. சோதினை வருதெண்டால் தான் எல்லாரும் ஒண்டா நிப்பம். அந்த நேரம் தண்ணிக் காசு எகிறும். அடுத்த மாதம் எங்கட வீடு பூட்டிக் கிடக்கும். தண்ணி பாவிச்சிருக்க மாட்டம். சராசரியாப் பாத்தா 15 - 20 அலகுக்குள்ள தான் பாவிச்சிருப்பம். இந்த சராசரியை எங்களுக்கு சாதகமாப் பயன்படுத்திறதுதான் நோக்கம். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அதன் படி தண்ணிக் கட்டணத்தை 80 ரூபாக்குள்ள மட்டுப்படுத்தி ரண்டு மாதம் வெற்றிகரமா எங்கட திட்டம் நிறைவேறிச்சு. நீர் மானி வாசிப்பாளர் வரும் திகதிகள் எங்களுக்கு கொஞ்சம் தெரியும். அந்தக் காலத்தில எங்கட வீட்டுக் கதவை ஆர் தட்டினாலும் திறக்கிறேல்ல. மூண்டாம் மாதம் மானி வாசிப்பாளர் வீட்டுக்குள்ள வந்து மானியை வாசிச்சா, கட்ட வேண்டிய கட்டணம் 700 ரூபாவை எட்டியது. இப்ப எங்களுக்கு ஒரு சிக்கல் வந்திட்டுது. அடுத்த முறை மானி வாசிப்பாளர் வரேக்க வீட்டில நாங்கள் நிண்டே ஆக வேணும் இல்லாட்டி திருப்பியும் 700 ரூபா வரும். பாவிக்காத தண்ணிக் காசும் சேர்ந்து எங்கட தலையில கட்டப்படும். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அப்ப இன்னுமொரு வழி கண்டு பிடிச்சம், மானி வாசிப்பை எழுதி வீட்டுக் கதவில ஒட்டி விடுறது. மானி வாசிப்பாளர் அதனை மானி வாசிப்பாக கருதி கட்டணம் அறவிடுவார். எங்களுக்கு ஏற்றமாரி மானி வாசிப்பை கணக்குப் போட்டு வாசல்ல ஒட்டி விடுவம். மானி வாசிப்பளரும் அதை நம்பி அலகுகளைக் கணிப்பார். கொஞ்ச காலம் நீர்க் கட்டணமாக 100 ரூபாக்குள்ள செலுத்தின்னாங்கள்.</div></div>பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-23122933701587530532011-12-21T14:12:00.000+05:302011-12-21T14:12:53.905+05:30ஞாபகம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div style="text-align: justify;">நீண்ட நாட்களுக்கு பிறகு பல்கலைக் கழகம் சென்றதில் பழைய ஞாபகங்கள் சில வந்து போயின. நான் கற்ற காலத்தில் நிலவிய சூழல் இப்போது இல்லை. அன்றைய சூழல் பயம் மிக்கதும் அடுத்தது என்ன நடக்கும் எண்டு தெரியாததாகவும் இருந்தது. வீட்டிலிருந்து வெளிக்கிட்டால் போய்ச் சேர வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்வோமோ என்பது உறுதியில்லாமல் இருந்த காலம். அந்தக் கால கட்டங்களில் நிகழ்ந்த சில சம்பவங்கள் நினைவுக்கு வந்து போயின. சில சம்பவங்களை இப்ப நினைச்சால் சிரிப்பாக் கிடந்தாலும் அந்த நேரம் எங்கட வாழ்க்கை பயத்தோடே கழிந்தது. அவற்றில் என் நினைவுக்கு வரும் சில சம்பவங்களை மீட்டிப் பார்க்கிறேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கற்றதால் சொய்சாபுரம் தான் நானும் என்னுடைய நண்பர்களும் தங்கிய இடம். முதல் வருடம் சொய்சாபுர தொடர்மாடிகள் ஒன்றில் வீடு ஒன்றை எடுத்து மொத்தமாக நால்வர் பகிர்ந்து கொண்டோம். சிக்கனமான தொகைக்கு வீடு கிடைக்குதெண்டு எடுத்த வீட்டின் சூழல் எப்பிடி எண்டது கொஞ்ச நாள் போகத்தான் புரிஞ்சு கொண்டது. இனி என்ன செய்யுறது தலையைக் குடுத்திட்டம் பயத்தை வெளீல காட்டாமல் பிரச்சினைகளை எதிர் கொண்டே ஆக வேண்டிய சூழல். </div><div style="text-align: justify;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIWXBmKm7F7wfB0xXn2AtUpvba_nxwuYRkc9jly-9FoMR6UN_p1KryqwO5idZ_XPWhtOgDUB-kCuROua4lUimkFXKJpSs6GEtag1Xauip_-6ldld_4MTttwdJFACtH53PpG0oTaZiBrMa-/s1600/z_p-24-Facelift-02.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="212" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIWXBmKm7F7wfB0xXn2AtUpvba_nxwuYRkc9jly-9FoMR6UN_p1KryqwO5idZ_XPWhtOgDUB-kCuROua4lUimkFXKJpSs6GEtag1Xauip_-6ldld_4MTttwdJFACtH53PpG0oTaZiBrMa-/s320/z_p-24-Facelift-02.jpg" width="320" /></a></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நாங்கள் இருந்தது முதலாவது மாடி. ஒரே நீட்சியாக அமைந்திருந்த மூன்று தொடர் மாடிகளின் நடு மாடியில் எங்கள் வீடு. சன்னலால் எட்டிப் பார்த்தால் இந்தத் தொங்கல்லேந்து அந்த தொங்கல் வரையும் தெரியும். எதிர் மடிகளில நடக்கிற சண்டைகள் எங்களுக்கு பொழுது போக்கு. சிங்களத்தில நடக்கிற சண்டைகள் எங்களுக்கு விளங்காட்டிலும் ககைக்கிற தொனி, கையால் அடிபடுகின்ற மற்றும் கதவு சன்னல் அடிக்கப்படுற சத்தங்களை வைத்து சண்டையை நாங்களே கற்பனை பண்ணி அவர்கள் பேசுவதை எங்களுக்கு விரும்பிய தமிழுக்கு மாத்தி (டப்பிங் படங்களைப் போல) எங்களுக்குள் நக்கலடித்துக் கொள்ளுவம். நாங்கள் மூவர் ஒரே மட்டத்தைச் சேர்ந்தவர்கள். கிட்டத்தட்ட ஒரே சிந்தனை ஒரே ரசனையுள்ளவர்களாகவும் அரட்டையடிப்பதில் வல்லவர்களாகவும் இருந்தோம். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">பிறகென்ன கதைக்கப் பிடிச்சால் கதை அந்த மாரிப் போகும். சில வேளைகளில் படுக்கேக்க காலமை மூண்டு நாலு மணியாகும். சூடான விவாதங்கள் ஆளாளுக்கு நக்கல், அவன் அவள் அவர் எண்டு ஊருலகம் முழுக்க அலசி ஆராஞ்சு நாட்டு நடப்பு (சமாதானம் மெல்ல மெல்ல செத்துக் கொண்டிருந்த காலப்பகுதி) எண்டு கதை நீளும். எங்களுக்கிடையில் ஒழிவு மறைவின்றி தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் உட்பட எல்லா விடயங்களையும் பகிர்ந்து கொண்டோம். கிட்டடியில சில காலம் நெருங்கிய தொடர்புகள் இல்லாமல் போன, அன்றைய அறை நண்பர்களில ஒருத்தனை சந்திச்சன். “மச்சான் அந்தக்காலத்திலேந்து எங்களுக்குள்ள ஒழிவு மறைவு இருந்ததில்லைத் தானே, வேறொருத்தருக்கும் சொல்லேல்ல உனக்கு மட்டும் சொல்லுறன்” எண்டு தன்னுடைய வாழ்க்கையின் முக்கியமான முடிவு ஒன்றை எனக்கு சொன்ன போது எனக்கு வந்த சந்தோசத்துக்கு அளவேயில்லை. அவன் எங்க எங்கையோ போய் வந்தாலும் அதே நட்பு இண்டைக்கும் இருக்கு எண்டு நினைக்க சந்தோசம் தான். நீண்ட நேரம் அவனோட இருந்து பழைய சில ஞாபகங்களை மீட்டிச் சந்தோசப்பட்டன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">- தனஞ்சி</div></div>பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-47872567782431077772011-05-18T00:17:00.003+05:302011-05-18T07:28:02.319+05:30அஞ்சலி!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">மே 18...<br />
<div>நானிருக்குமிடங்களில்</div><div>விளக்குகள் ஏற்றப்பட்டிருக்கின்றன...</div><div>என் மனம்</div><div>அஞ்சலி செய்கிறது...<br />
<br />
பி. கு: வெசக் நாளில் எழுதப்பட்டது.<br />
<br />
<br />
</div></div>பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-67316285346246311072011-05-01T23:04:00.001+05:302011-05-02T14:31:42.522+05:30கணக்கு 13<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">ஒரு பக்க நீளம் 60 cm ஆகவுள்ளதும் மற்றைய இரு பக்க நீளங்கள் முழு எண்களாகவும் அமையக் கூடிய செங்கோண முக்கோணங்கள் எத்தனை அமைக்கலாம்? அம்முக்கோணங்களின் பக்க நீளங்கள் எவை?</div>பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-34180353702800978292011-03-01T23:38:00.003+05:302011-03-02T08:37:07.907+05:30திறமையிருந்தும்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என்ர ஊராக்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் போலத்தான் என்ர வாழ்க்கையும் இருந்தது. என்ர வாழ்க்கையொண்டும் விதி விலக்கானதல்ல. சொன்னா நம்பமாட்டியள் முதலாம் ஆண்டு ஒரு பள்ளிக்கூடம். ரண்டாம் மூண்டாம் ஆண்டு இன்னொரு பள்ளிக்கூடம். நாலாம் அஞ்சாம் ஆண்டு அடுத்த பள்ளிக்கூடம். இப்பிடி சாதாரண தரம் வரை ஒண்டைவிட்ட ஒரு வருசம் நான் பள்ளிக்கூடம் மாறின படிதான். இதில முக்கிய விசயம் என்னெண்டா ஒவ்வொரு பள்ளிக்கூடமும் ஒவ்வொரு ஊரில. நான் அவ்வளவு குழப்படியோ எண்டு தானே நினைக்கிறீங்கள். ஆனா நான் அப்பிடியில்லை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஈழத்தமிழன்ர நாளாந்த நிகழ்ச்சிகளில ஒண்டான இடப்பெயர்வு என்னை இப்பிடிப் பாடாப் படுத்திப் போட்டுது. இஞ்ச கொஞ்சம் தொட்டு அங்க கொஞ்சம் தொட்டு படிப்புகளும், நாளுக்கு நாள் புதுப் புது ஆசிரியர்களும் புதுப்புது நண்பர்களும் எண்டு என்ர வாழ்க்கை போச்சுது. இருந்தாலும் படிச்சு நல்ல நிலைக்கு வரவேணுமெண்ட கொள்கையை நான் ஒரு நாளும் கை விடேல்ல.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சுனாமி என்ர வாழ்க்கையிலையும் தன்ர கை வரிசையைக் காட்டிச்சு. ஆர்ப்பரிச்சு உள்ளுக்கு வந்த கடல் அம்மாவையும் அவவின்ர குடும்பத்தில சிலரையும் காவு கொண்டது. கடல் அலை உயரமா வரூது எண்டத கண்டுட்டு நான் ஓடித் தப்பின்னான். அந்த நேரத்தில அம்மான்ர நினைப்பு வராமல் போச்சு. நான் பத்தாம் ஆண்டு படிச்சுக் கொண்டிருந்த கடைசில நடந்த இந்த கொடூரத்தால பதினோராமாண்டில முதல் நாலைஞ்சு மாசமா நான் பள்ளிக்கூடம் போகேல்ல. என்னால அந்த சோகத்திலேந்து மீள முடியேல்ல. படிப்பு வேண்டாம் எண்டு நினைச்சிருந்தனான். அப்பாவும் சொந்தக்காரங்களும்எனக்கு ஆறுதல் சொல்லி பள்ளிக்கூடம் அனுப்பி வச்சினம். சாதரண தரச் சோதினை எழுதினன். எட்டு A ஒரு B. பாழாய்ப் போன ஆங்கிலத்துக்குத் தான் B.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">உ/ தரத்தில கணிதம் தான் படிக்கிறதெண்டு எப்பவோ நான் தீர்மானிச்சுக் கொண்ட விசயம். முதல் ஆறு மாசம் பள்ளிக்கூடமும் தனியார் கல்வி நிறுவனமும் போய் படிச்சுக் கொண்டிருந்தனான். அப்பத்தான், பாழாய்ப் போன வயசு பதினெட்டைத் தாண்டிச்சுது. வீட்டுக்கொருத்தர் நாட்டைக் காக்கப் புறப்படுக எண்டு கட்டாயப் படுத்தினாங்கள். தேடித் தேடி ஆக்களைப் பிடிக்கத் தொடங்கினாங்கள். நான் மட்டுமென்ன விதிவிலக்கோ?</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஒழிச்சு வாழ வேண்டிய நிலை. ஆரம்பத்தில வேறொரு இடத்தில இருந்த நான் என்ர சொந்த ஊருக்குத் திரும்பினன். ஊரிலேந்து பலர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான வேற இடங்களுக்குப் போயிட்டினம். கடும் செல்லடியால ஊரில பெரிசா ஒருத்தரும் இருக்கேல்ல. எனக்கு வேற வழி தெரியாமல் செல்லடியையும் பொருட்படுத்தாமல் ஊருக்கே போனன். வலுக்கட்டாயமா ஆக்களைச் சேக்கிறதில பொடியள் மும்முரமா நிண்டதால பகல் நேரத்தில ஒருத்தரும் புழங்காத பனங்கூடலுக்குள்ள காவோலைகளை சுத்தவரக் குமிச்சுப் போட்டு நடுவுக்குள்ள படுத்திருந்தன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மத்தியானச் சாப்பாட்டை அப்பம்மா ஒழிச்சுக் கொண்டு வருவா. பக்கத்துக் காணிக்குள்ள வந்து வச்சிட்டுப் போவா. நான் எடுத்துச் சாப்பிடுவன். அந்த நேரம் நிறையப் படிக்கோணுமெண்ட வெறியிருந்ததால என்னட்ட கிடந்த உயர்தரப் பாடப் புத்தகங்களை என்ர பாட்டில வாசிச்சன். சுயமாப் படிச்சன். பல பாடங்கள் தொடக்கத்தில விளங்காம இருந்தாலும் படிப்பிக்கவும் சந்தேகம் கேக்கவும் ஒருத்தரும் இல்லை. ஒண்டும் செய்யேலாது. என்ர அறிவுக்கெட்டின வகையில திரும்பித் திரும்பி வாசிச்சு அவையளை விளங்கிக் கொண்டன். பயிற்சிப் புத்தகங்களோ, செய்து பாக்க சோதினைப் பேப்பர்களோ இல்லை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இரவு கடக்கரை மணல் வெளியில கொஞ்சம் பள்ளம் தோண்டிப் போட்டு படுத்திருப்பன். ஏனெண்டா இரவிரவா வெளிச்சத்தோட வீடு காணி வழிய பொடியள் தப்பியோடினாக்களைத் தேடுவாங்கள். கடக்கரையில ரோந்து போய்க் கொண்டிருப்பாங்கள். ஊராக்களும் மாறி மாறி ஒழுங்கு முறையில ரோந்து போகோணும். நான் படுத்திருக்க ரோந்து போறவங்கள் கதைச்சுக் கொண்டு போறது வடிவாக் கேக்கும். எல்லாத்தையும் தாண்டித் தான் நான் ஒழிக்க வேண்டிய நிலை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஒரு நாள் ரண்டு நாளில்ல, ஒண்டரை வருசம் நான் இப்பிடி வாழ்ந்தன். சூரியன் உதிச்சு மறையும் வரை ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படி. நான் பல சந்தர்ப்பங்களில் அருந்தப்பில் பிடிபடாமல் தப்பியிருக்கிறன். அந்த நேரங்களில ஆமி அடிக்கிற மல்ரி பரல் முதல் எல்லா செல்களும் என்னைச் சுத்தி எங்கட ஊரில விழும். செவிப்பறை வெடிக்கும். எல்லாத்தையும் தாங்கிக் கொண்டு ஒழிச்சு இருந்தன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">எங்கட தமிழாக்களின்ர குணம் தெரியும் தானே. தான் நல்லாயில்லட்டிலும் பரவாயில்லை. மற்றவன் நல்லாயிருந்தா பொறுக்காதே. ஆரோ ஒருத்தர் நான் ஊரில தான் இருக்கிறதா மாட்டிக் குடுத்திட்டாங்கள். என்ர அப்பாவைப் பிடிச்சுக் கொண்டு போய் என்னை ஒப்படைச்சாத்தான் விடுவன் எண்டாங்கள். என்னைப் பிடிச்சுத் தரச் சொல்லி அப்பாவை விடுவிச்சாங்கள். அதோட அப்பா தலை மறைவானவர்தான். எப்பவாவது இரவோட இரவா ஊருக்கு வந்து தான் உயிரோட இருக்கிற விசயத்த அப்பம்மாக்குச் சொல்லிப் போட்டு போடுவார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">கடைசியில பொடியள் எங்கட இடத்தை விட்டுப் பின் வாங்க வேண்டிய நிலை. நான் கொஞ்ச தூரம் இடம்பெயர்ந்து போனன். பிறகு சனத்தோட சனமா ராணுவக் கட்டுப் பாட்டுக்குள்ள வந்தன். அங்க அனுபவிச்சத சொல்லத் தேவையில்லை. நாலு மணிக்கெழும்பி குழிச்சாத்தான் நல்ல நிலையிலுள்ள தண்ணியில குளிக்கலாம். சாப்பாடு தண்ணி உடுப்பு வசதிகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அதுக்குள்ள இருந்து நான் எப்பிடியும் உ/த சோதினை எடுக்க வேணுமெண்டு முடிவெடுத்தன். படிக்கிற வசதி செய்து தரச் சொல்லி எத்தினை பேரைக் கெஞ்சினன். நான் மட்டுமில்லை என்னோட சில பொடியங்களையும் சேத்துக் கொண்டு மண்டாடினன். பல பெரியாக்கள் வந்து அது செய்யலாம் இது செய்யலாம் எண்டு அறிக்கை மட்டும் விட்டுட்டு போவினம். எதுவும் நடந்ததில்லை. கொஞ்சக் கொஞ்ச வசதி வாய்ப்புகள் படிக்கிறதுக்கு கிடைச்சது. அதுக்கு நன்றி சொல்லியே ஆகவேணும். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நான் படிக்கிற பொடியன் எண்டு சொன்னபடியாத்தான் ஆமி விசாரணைக் கெடுபிடிகளிலேந்து ஓரளவுக்கேனும் விடுதலை கிடைச்சுது. அதுக்குள்ளேந்து படிக்கேக்க எங்கட மெத்தப்படிச்ச சில தமிழர்களே சொன்னாங்கள் நீ படிச்சு என்னத்த கிழிக்கப் போறாயெண்டு. இருந்தாலும் என்ர வைராக்கியத்தை நான் கை விடேல்ல.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நான் படிக்கிறதுக்கு எடுத்த முயற்சிக்கு சின்ன உதாரணம். முகாமுக்குள்ள வந்து போற அண்ணாமார் அக்காமர் சிலரைப் பிடிச்சு எனக்கிருந்த சில சந்தேகங்களைத் தீக்கிறதுக்கு ஆசுப்பத்திரியில ஆசிரியர் சிலரைச் சந்திப்பதற்கான ஏற்பாட்டைச் செய்தன். ஏற்பாடு முடிஞ்சாப்பிறகு நான் ஆசுப்பத்திரிக்கு முகாமிலேந்து போக வேணுமெண்டா தமிழ் வைத்தியர் எனக்கு வருத்தமெண்டு உறுதிப்படுத்த வேணும். முதல் நாள் காச்சலெண்டு போய் காட்டினன். வைத்தியர் போக விடேல்ல. ரண்டாம் நாள் வைத்தியரட்டைப் போய் உண்மையைச் சொன்னன் படிக்கிறதுக்காகத்தான் நான் போக வேணுமெண்டு. வைத்தியர் நக்கலா நாலு கதையும் சொல்லி, படிச்சுக் கிழிச்சது காணுமெண்டு திட்டி போகேலாதெண்டு சொன்னார். இப்பிடிப் பல முயற்சி செய்து முகாமுக்குள்ள கிடைச்ச வசதியைக் கொண்டு படிக்கோணுமெண்ட வெறியில படிச்சன். உ/த பரீட்சை மண்டபத்தில நான் ஒருத்தன் தான் கணிதப் பிரிவு. எனக்காக நாலு பரீட்சை மேற்பார்வையாளர்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சோதினை முடிவில கணிதப்பிரிவில நல்ல பெறுபேறுகளை எடுத்ததால தகுதியடிப்படையில் மொறட்டுவை கம்பஸ் பொறியியல் பீடம் கிடைச்சுது. இஞ்ச வந்தா ஆங்கிலத்தில விரிவுரைகள். எனக்கு சரியாப் புரியேல்ல. நாலு வருசத்துக்குப் பிறகு ஒரு வகுப்பறையிலேந்து ஆசிரியர் படிப்பிக்க பாடம் படிக்கிறன். எனக்கு நித்திரை நித்திரையா வந்துது. என்னால சமாளிக்க முடியேல்ல. கம்பஸ் தொடங்கி மூண்டு மாசத்துக்குள்ள சோதினை. அந்த சோதினை தான் நான் படிக்க வேண்டிய பொறியியில் பிரிவைத் தீர்மானிக்கப் போகுது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நான் எதிர்பார்த்த துறை எனக்குச் சில வேளை கிடைக்காமல் போகலாம். ஒரே காரணம் ஆங்கிலத்தில பாடங்களை என்னால தொடர முடியாமல் போனதுதான். ஆங்கில மொழியில ஒரு பாடத்தை படிக்கிறதுக்குரிய ஆயத்தத்தை செய்யுறதுக்கு அவகாசம் காணாததுதான். ஆனால் நீங்களெல்லாரும் என்னைப் பாத்து சொல்லுவீங்கள் வன்னி மாவட்டத்திலேந்து வந்தவனுக்கு ஒண்டுமே தெரியாதெண்டு. ஆனா அதப் பற்றி எனக்கு கவலையில்லை. இவ்வளவு முன்னேறி வந்த எனக்கு இப்பிடியொரு சிக்கல் வருமெண்டு கனவில கூட நினைச்சதில்லை. இருந்தாலும் மேலும் மேலும் படிக்க வேணுமெண்டிருக்கிற என்ர ஆர்வத்தை ஆராலையும் தடுக்கேலாது....</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">-------------------------------------------------------------------------------------------------------------</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><i>நான் சந்தித்த நண்பர்களில் இவனும் ஒருத்தன். இவனுடைய திறமை என்னை வியக்க வைத்தது. ஆனால் இவனை இந்த சமூகம் சரியாக அடையாளம் கண்டு கொள்ளாதது என்னைப் பாதித்தது. அவனுடைய வாழ்க்கையை அவனாக நான் இங்கே எழுதியிருக்கிறேன். நிறைய இருந்தாலும் முடிந்தளவு சுருக்கியிருக்கிறேன். </i></div><div style="text-align: justify;"><i><br />
</i></div><div style="text-align: justify;"><div style="text-align: center;"><i>எனக்குள்ளே எழுந்த சில கேள்விகள் :</i></div></div><div style="text-align: justify;"><ul><li><i>இனங்காணப்படாத திறமைசாலிகள் இவனைப் போல பலர் இருக்கிறார்கள் என்பது வெளிப்படை. எவ்வாறு அவர்களை இனம் காணுவது?</i></li>
<li><i>மின் விளக்கு வெளிச்சத்தில் படிச்சு, அம்மா சத்துணவு சமைச்சுத் தர, நேரத்துக்கு நேரம் சாப்பாடு சமைச்சு - தேத்தண்ணி போட்டுத் தர, மணித்தியாலத்துக்கொரு பிரத்தியேக வகுப்பு வச்சு, நாளுக்கொரு பயிற்சி சோதினை வச்சு, சந்தேகம் தீர்க்க வாத்திமார் டசின் கணக்கில இருக்கப் படிச்சு நல்ல பெறுபேறெடுத்த நம்மவர்கள் எங்கே? சுயமாக உ/த கணிதப்பிரிவில் கற்று சிறந்த பெறுபேறெடுத்த இவனைப் போன்றவர்கள் எங்கே? </i></li>
<li><i>இவர்களுடைய அறிவுத் திறமை இப்பிடியே மழுங்கடிக்கப் பட்டு விடுமோ? </i></li>
<li><i>மிகத் திறமையான இவனைப் போன்றவர்கள் மொழிப் பிரச்சினையால் பல்கலையில் திறமையற்றவர்களாக கணிக்கப்படுகிறார்களே... ஒருத்தனின் திறமையை எவ்வாறு சரியாக மதிப்பிட முடியும்?</i></li>
</ul></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">-தனஞ்சி.</div></div>பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-54092045325473154902010-11-27T13:32:00.000+05:302010-11-27T13:32:31.946+05:30கண்ணீர்என் விழியோரம் வழியும் கண்ணீர் துளித்துளியாய் வடியட்டும்...<br />
கையால் துடைத்து தடத்தையழிக்க நான் விரும்பவில்லை...<br />
கார்த்திகையின் கண்ணீர் மழையிலும் கரைந்து விடக்கூடாது...<br />
சுடர் விட்டெரியும் விளக்கின் வெப்பத்திலும் உலர்ந்து விடக்கூடாது...<br />
உடலெங்கும் வடிந்து உரமாய் எனக்குள்ளே அவை உறையட்டுமே...<br />
என்னுள்ளே விதைக்கப்பட்ட வீரம் வீறு கொண்டெழுவதற்காக...பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-57753847911928580302010-08-29T14:24:00.000+05:302010-08-29T14:24:17.708+05:30அப்ப ஆசைப்பட்டன்...அப்ப ஆசைப்பட்டன்...<br />
வீட்டை சம்மதிக்கேல்ல...<br />
நான் விரும்பிறன் எண்டு<br />
எவ்வளவோ சொல்லிப் பாத்தன்...<br />
மாற்றமில்லை...<br />
வீதியில எல்லாரும் பாக்க<br />
திரியுறன் தானே எண்டன்...<br />
கையை விட்டுடு எண்டினம்...<br />
கூடவே கூட்டிக்கொண்டு திரிஞ்சிட்டு<br />
கழட்டி விட எனக்கு மனமில்லை...<br />
எல்லாருமே எதிர்த்திச்சினம்...<br />
உனக்கு வயசு பத்தாது<br />
சட்டமே ஒத்துக் கொள்ளாது எண்டினம்...<br />
கடைசில கையை விட்டுட்டன்...<br />
<br />
இப்பவும் ஆசைப் படுறன்...<br />
மறுப்புகள் இல்லை...<br />
மினக்கெட நேரமில்லை...<br />
ஓய்வும் கிடைக்குதில்லை...<br />
வாகன சாரதி அனுமதிப்பத்திரம் எடுக்குறதுக்கு...<br />
வாகனம் ஓட இப்பவும் ஆசைப்படுறன்...<br />
<br />
<br />
<br />
குறிப்பு : அப்பாடா...!!! ஒரு மாரி ஐம்பது பதிவுகள் எழுதீட்டன்... என்னை உற்சாகப்படுத்திய, பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மனம் கனிந்த நன்றிகள்.பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-58110379001068982632010-08-21T12:28:00.001+05:302010-08-21T12:28:54.341+05:30இணையத்தைக் கண்டு பிடித்தவர் யார்?<div style="text-align: justify;">உறவினர் வீடொண்டுக்குப் போனனான். அவயின்ர குடும்பத்தில நாளைக்கு அஞ்சாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுதப் போற தங்கச்சி ஒருத்தி இருக்கிறாள். நான் போய் உள்ளட்டதும் அவளின்ர அம்மா சொன்னா ‘ஆ... “மெத்த” படிச்ச அண்ணா ஒராள் வாறார், உனக்குத் தெரியாதத கேளு பிள்ளை...’</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">பிள்ளை கேட்டதில முதல் கேள்வி இணையத்தை கண்டு பிடிச்சவர் யார்? நான் முழுசினன். பிள்ளை கேள்விப் பத்திரத்தைக் கொண்டு வந்து காட்டி இதில நாலு விடையிருக்கு. அதிலையெண்டாலும் பாத்து சரியான விடையைச் சொல்லுக்கோ... அதில ஒண்டு கடை ஒண்டின்ர பெயர் இருந்திச்சு. ஒரு வேளை அந்தப் பெயரில ஒருத்தர் இருந்த படியாத்தான் கடைக்கு அவற்ற பெயரை வச்சாங்களோ எண்டு நான் யோசிச்சன். கேட்ட கேள்விக்கு நேரடியாகவும் பதில் சொல்லத் தெரியேல்ல. நாலு விடைக்குள்ளேந்தும் ஆளைக் கண்டு பிடிக்கவும் முடியேல்ல. இனியென்ன செய்யுறது வெக்கத்தை விட்டுட்டுச் சொன்னன் நான் இணையத்தில பாத்து சொல்லுறன் எண்டு. தாய் கேட்டா 'தம்பி நீ தானே விடிஞ்சா பொழுது பட்டா இணையத்தோட இருக்கிறனி உனக்கும் உது தெரியாதோ?'</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தங்கச்சி நிறையக் கேள்விகள் கேட்டாள். என்னால பலதுக்குப் பதில் சொல்ல முடியேல்ல. உதாரணத்துக்கு இன்னுமொரு கேள்வி. ஒரு வருட நாட்காட்டியில் இலங்கை அரசாங்க விடுமுறைகள் எத்தனை நாட்கள்? என்னால முடியேல்ல. நான் சொன்னன் 'பிள்ளை ஒண்டையும் யோசியாத, உதையெல்லாம் யோசிச்சுக் குளம்பாத, நாளைக்குப் போய் தெரிஞ்சத செய்து போட்டு வா...' தாய் சொன்னா 'தம்பி அதெப்பிடி சும்மா விடேலும். நல்ல புள்ளியெடுக்கேல்ல எண்டா கொழும்பில உயர் பள்ளிக்கூடங்களுக்கு ஆறாம் ஆண்டு அனுமதியில்லாமல் போடும். பிறகு எந்தப் பள்ளிக்கூடத்தில அனுமதியெடுக்கிறது. பிறகு என்ர பிள்ளை கண்ட கண்ட காவாலிப் பிள்ளையளோடதானே படிக்க வேண்டி வரும். நீங்கள் மட்டும் நல்ல பள்ளிக்கூடங்களில படிச்சு முன்னுக்கு வந்திடுங்கோடா...' உதுக்கு நான் என்னத்த சொல்லுறது. நாளைக்கு சோதினையெழுதப் போற பிள்ளைக்கு முன்னால விவாதிக்க விரும்பேல்ல.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">எனக்குத் தெரிஞ்சு நான் படிச்ச கல்லூரியில நுழைவுத்தேர்வு தனியாக நடத்துவாங்கள். அதில் சித்தியெய்தினாலே கல்லூரி அனுமதி கிடைச்சிடும். அரசாங்கம் புலமைப் பரிசில் வழங்குறதுக்காக நடத்துற சோதினையை தங்கட சோம்பேறித் தனத்துக்காக தங்கட பள்ளிக்கூடத்துக்கான நுழைவுத்தேர்வா கருதுற பள்ளிக்கூடங்கள் இருக்கும் வரை, அதையே தங்களுக்கான பெரிய கெளரவமாக கருதுற பெற்றோர் இருக்கும் வரை பிள்ளை சித்திரவதை செய்யப்படுவது தடுக்கப்பட முடியாது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">எல்லாத்தையும் விட, தங்கச்சி கேட்ட கேள்விகளைப் பாக்கேக்க கடைசியா எனக்கு ஒரு பெரிய உண்மை விளங்கிச்சு. நாளைக்குச் சோதினையெழுதப் போற பிள்ளைகளோட நான் சோதினையெழுதினால் நான் பரீட்சையில சித்தியடைவது சந்தேகமே; இன்னும் சொல்லப் போனால் கொழும்பிலுள்ள உயர் பாடசாலை எண்டு சொல்லப்படுகின்ற பள்ளிக்கூடங்களில் எனக்கு ஆறாம் ஆண்டுக்கான அனுமதி கிடைக்காது.</div>பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-27767872013938020862010-08-04T22:51:00.000+05:302010-08-04T22:51:25.790+05:30கணக்கு_12<div style="text-align: justify;">ஒரு புத்தகத்தின் பக்கங்களை இலக்கமிடுவதற்கு மொத்தமாக 1629 இலக்கங்கள் (digits) பயன்படுத்தப்பட்டுள்ளன எனின் புத்தகத்தின் பக்கங்களின் எண்ணிக்கை எத்தனை?</div>பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-61279451826736372862010-07-29T23:07:00.002+05:302010-07-29T23:53:26.517+05:30வாலாக் கொடி<div style="text-align: justify;">மார்கழி மழை கால விடுமுறைக்கு எங்கட பிரதேசப் பொடியளின்ர பொழுது போக்கு பட்டமேத்துறதுதான். மழைக்காலம் எண்டபடியா விளையாடேலாது. அப்ப பள்ளிக்கூட விடுமுறை வேற. வட கீழ்ப் பருவக்காற்றும் அப்பத்தான் அளவா வீசத் தொடங்கியிருக்கும். பட்டம் விடுறதுக்கு பொருத்தமான காலம் அப்பத்தான். பொடியளுக்கு பட்டம் விடுறதுதான் தொழில். பட்டத்திலையும் வாலாக்கொடி ஏத்தாதாக்கள் ஒருத்தரும் இல்லை எண்டு சொல்லலாம். வாலாக் கொடியெண்டா டயமண்ட் வடிவில மூண்டே மூண்டு ஈக்கிலையும் ரிசுவையும் கொஞ்சம் நூலையும் பயன்படுத்திச் செய்யப்படும் பட்டம். இவ்வளவுதான் வாலாக்கொடி கட்டுறதுக்குத் தேவை. ஆனாலும் எனக்கு இண்டை வரைக்கும் கட்டத் தெரியாது. ஏனெண்டா ஈக்கிலை வளைச்சு செட்டையை சரியா சமச்சீரா ஒட்டுறதிலதான் திறமையே இருக்கு. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">பெரிய பெரிய பட்டங்கள் கட்டி ஏத்த முன்னம் ஏழெட்டு வயசுகளில வாலாக்கொடியை கடையில வாங்கி ஏத்துறனான். வாலில்லாமல் ஏத்தலாம். ஆனா அது சரியான சிக்கலான விசயம். குத்தத் தொடங்கினா நிலத்தில முட்டுமட்டும் குத்தும். இல்லாட்டி அங்கனக்க பனை தென்னை வேம்பு ஆல அரச மா மரங்களில தொங்கிப் போடும். அதனால பெரும்பாலும் வால் கட்டித்தான் ஏத்துறனாங்கள். ஏத்த முன்னம் முச்சை போடுறதிலையும் கன வகையிருக்கு. உச்சி முச்சையெண்டா பட்டம் தலைக்கு மேல நிக்கக் கூடிய மாரி போடுறது. கொஞ்சம் குறுக்கி விட்டா - இழுவை முச்சையெண்டா பட்டம் தலைக்கு மேல வராம குறிப்பிட்ட ஏற்றத்தில நிக்கும். இழுவை நல்லா இருக்கும். வண்டி வைக்காது (நூல் தொய்யலாக இருக்காது). இப்பிடி கன விசயம் வாலாக் கொடிக்கே இருக்குக் கண்டியளோ. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இன்னொண்டையும் சொல்லோணும், எத்தினை விதமான பட்டங்கள் ஏத்தினாலும் வானத்தில ராசா இந்த வாலாக் கொடிதான். ஏனெண்டா வானத்தில ஏறி நிக்கேக்க வேற எந்தப் பட்டத்தின்ர நூலோட வாலாக் கொடியின்ர நூல் மாட்டுப்பட்டாலும் மற்றப் பட்டம்தான் அறுத்துக் கொண்டு போகும். மற்றாக்களின்ர பட்டத்தை அறுக்கப் பண்ணோணும் எண்டதுக்காகவே வாலாக்கொடியேத்தினதாகவும் ஞாபகம் இருக்கு.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcDgYuN2ePVbySvkJnJZ-lfQyvEOW-c_OKmC6RQXbI8CmCqZRO3TxJZeibFqRMYaqmW7Ye1kC3O92hEjGIWV5NTQ-_6K1UsfhSvHJ67mA34aL1ai6RgoXeVTh0267F-DavYMYtvRyNNTUH/s1600/Kite.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcDgYuN2ePVbySvkJnJZ-lfQyvEOW-c_OKmC6RQXbI8CmCqZRO3TxJZeibFqRMYaqmW7Ye1kC3O92hEjGIWV5NTQ-_6K1UsfhSvHJ67mA34aL1ai6RgoXeVTh0267F-DavYMYtvRyNNTUH/s320/Kite.jpg" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">வாலாக்கொடி</td></tr>
</tbody></table><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">பட்டமேத்தேக்கையும் பல அனுபவங்கள். ஒரு தைப்பொங்கலண்டு ஆசையா வாலாக் கொடியும் நூலும் புதுசு வாங்கி ஏத்தினனான். பட்டம் ஒரே இழுவையில ஏறீட்டுது. வலு சந்தோசம். நூலை தொடர்ந்து இழக்கிக் கொண்டே இருந்தன். பட்டத்தின்ர இழுவைக்கு நூலும் போய்க் கொண்டே இருந்திச்சு. திடீரெண்டு பாத்தா கையில நூலைக் காணேல்ல. காலுக்கு கீழ நூல்க் கட்டை மட்டும்தான் கிடந்தது. புது நூல் கட்டையின்ர அடியில நூல் முடிஞ்சிருக்கிறேல்ல. 'நூலைப் பிடி நூலைப் பிடி'யெண்டு கத்தினதுதான்; வாலாக்கொடி பாத்துக் கொண்டு நிக்கப் போச்சுது. அடியில நூலைக் கட்டியிருந்தா எங்கையாவது மரங்களில அடிக்கட்டை சிக்கி நிண்டு வாலாக் கொடியேறி நிண்டிருக்கும். இராக்கொடி பகல்கொடியா பட்டம் சளைக்காமல் நிண்டிருக்கும் மழை பெய்தோ அல்லது காத்து நிண்டோ பட்டம் படுக்காம இருக்கும் வரை... </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இன்னொருமுறை ஏழெட்டு வயசு காலப் பகுதி. வீட்டுக்கு முன்னால் காணிக்குள்ளதான் வாலாக்கொடியேத்திக் கொண்டு நிண்டனான். பட்டமேறீட்டுது. அப்ப வலு சந்தோசம்தானே. கையில நூலைப் பிடிச்சுக் கொண்டு வலிச்சு, இழக்கி, இழுத்துக் கொண்டோடி குத்த வச்சுப் பாத்து சந்தோசப் பட்டுக் கொண்டிருந்தன். தலைக்குமேல படார் எண்டொரு பெரிய வெடிச் சத்தம் கேட்டுது. அந்தக் காலத்தில வெடிச் சத்தம் கேட்டா எந்த இடத்தில நிண்டாலும் உடன குப்புறப்படு எண்டு சொல்லித் தந்தவங்கள். எனக்கு அந்தச் சின்ன வயசு காலப்பகுதியில அந்த இடத்தில குப்புறப்படுக்கிறதில உடன்பாடு இல்லை. எங்கையாவது ஓடி மறைஞ்சிருக்கோணுமெண்டதுதான் என்ர எண்ணம். வெட்டை வெளீல நிண்டா குண்டு பட்டுடும். எங்கையாவது ஓடி ஒழிச்சா ஒண்டும் நடக்காது எண்டது என்ர நினைப்பு பாருங்கோ. அந்தக் காலத்திலையே எனக்கு என்ன ஒரு ஞானம்!!! </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஆட்லறி குண்டுகளின்ர முதலாவது வெடிச்சத்தம் ஏவின இடத்திலையும் ரெண்டாவது வெடிச்சத்தம் வானத்திலையும் மூண்டாவது வெடிக்கிற இடத்திலையும் கேக்கும். எங்கட தலைக்கு மேல ரண்டாவது வெடி வெடிச்சா எங்களுக்குப் பாதிப்பில்லை எண்டத ஊகிக்கலாம் எண்டு பிறகுதானே தெரிஞ்சுது. ஆனாலும் எத்தினை குண்டுகள் அடிக்கிறாங்கள் எண்டு தெரியாதுதானே. அத விட ஒருக்கா அடிச்சா தொடந்து ரண்டு மூண்டு அடிப்பாங்கள் எண்டொரு நம்பிக்கை. அண்டைக்கும் ஓடிப் பொய் ஒரு பத்தேக்குள்ள ஒழிச்சிருந்தனான். ஒரு அரை மணித்தியாலம் கழிஞ்சு சத்தம் ஒண்டும் இல்லையெண்டு வெளீல வந்தா என்ர கையில வாலாக்கொடியின்ர நூலிருக்கு. அதைக் கைவிடாமத்தான் இவ்வளவு நேரமும் இருந்திருக்கிறன். மேல பட்டத்தை பாத்தா வாலாக் கொடி எதுவுமே நடக்காததைப் போல எந்த சலனமுமில்லாம சாடிக் கொண்டிருந்தது. அந்த ஆட்லறிக் குண்டுகள் கடற்கரையில விளையாடிக் கொண்டிருந்த, காலாற ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அப்பாவிகள் சிலரின் வாழ்க்கையை காவு கொண்டதோடு சிலரின் அவயவங்களை பறித்தெடுத்ததென்பது வாலாக்கொடியைப் போல அதை ஏவினவங்களுக்கும் தெரிந்திருக்கச் சாத்தியமில்லை...</div>பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-19599066491686392232010-06-20T13:06:00.001+05:302010-06-20T13:07:17.390+05:30கணக்கு_11<div style="text-align: justify;">முந்த நாள் (நேற்றைக்கு முதல் நாள்) எனக்கு வயசு 25. வாற வருசம் நான் 28 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவேன்.</div><div style="text-align: justify;">அப்ப நான் எத்தினையாம் திகதி பிறந்தவன் எண்டு கண்டு பிடியுங்கோ பாப்பம்.</div>பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-63634314818567393842010-06-12T10:50:00.000+05:302010-06-12T10:50:43.678+05:30துலாப் போடுதல்...<div style="text-align: justify;">துலாப்போடுதல் எண்ட சொல் வழக்கை கேள்விப்படாமல் இருக்க மாட்டீங்கள் எண்டு நம்புறன். தூங்கி வழிதல் / விழுதல் எண்டு பொருள் படும். எல்லாருமே துலாப் போட்டிருப்பீங்கள் எண்டே சொல்லலாம். துலாப் போடுறவனை விட துலாப் போடுறவனைப் பாக்குறவனுக்கு ஒரு அலாதி சந்தோசம் இருக்குப் பாருங்கோ. துலாப் போடுறவன்ர ஒவ்வொரு அசைவையும் நல்லாவே ரசிக்கலாம். அது கிடக்க... இப்ப கொஞ்ச நாளா நான் துலாப்போடுற சந்தர்ப்பம் அதிகரிச்சுப் போட்டுது. இருந்தாலும் நான் மீட்டிப் பாக்க வந்த விசயம் சின்ன வயசில துலாப் போட்ட சந்தர்ப்பங்கள். எல்லாருக்குமே தெரியும் தானே படிக்கேக்க தான் துலாப் போட்டிருப்பன் எண்டு. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அந்தக் காலத்தில ஒரு குப்பி விளக்கோ அல்லது அரிக்கன் லாம்போ கொழுத்தி வச்சுட்டு சுத்தி வர இருந்து படிக்க வேண்டியதுதான். பொழுதுபட்டால் முகம் கைகால்களைக் கழுவிக்கொண்டு வந்து மேசையில இருக்க வேண்டும் எண்டது கட்டளை. என்ன செய்ய? பின்னேரங்களில ஓடி விளையாடிப் போட்டு வந்து மேசையில இருந்தா எப்பிடி இருக்கும்? அடிக்கடி துலாப் போடுவன். துலாப்போட்டு விளக்குக்கு மேல விழுந்து விளக்குப் பத்தியெரிஞ்சு மரணமான சம்பவங்களும் அந்தக் காலத்தில நிறைய நடந்ததுதான். துலாப்போடும்போது கூட இருக்கிறாக்களையும் கவனிக்காம துலாப் போட வேண்டியதுதான் (நித்திரைக்கு எங்க தெரியப் போகுது எங்கட மானப் பிரச்சினை). </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">படிக்கும்போது துலாப் போட்டால் ‘புத்தகத்தை மூடி வச்சிட்டுப் போய்ப் படு’ எண்டு அப்பா சொல்லுவார். அப்ப சந்தோசம் தானே எண்டு நினைப்பியள் போல... அண்டைக்குப் போய்ப் படுக்கலாம். பிரச்சினையில்லை. அடுத்தடுத்த நாட்களில, கூட நேரம் இருந்து படிக்க வேணும். சில வேளை விளையாடப் போற ஓய்வு நேரத்திலயும் இருந்து படிக்க வேணும். அண்டைக்கு பழகின பழக்கம் இண்டைக்கும் நான் துலாப் போடும்போது படிப்பது கிடையாது. எத்தினை மணியெண்டாலும் (வெள்ளன எண்டாலும்) படுத்துடுவன். (அறை நண்பர்களுக்கு தெரியும்) இவ்வளவு படிக்கக் கிடக்கே எண்டு சிந்திக்கிறதில்லை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">உயர் தரம் படிக்கும் வரை கற்பிக்கும் போது துலாப் போட்டதா ஞாபகம் இல்லை. ஆனால் அதற்குப் பின்னர் கற்பிக்கும்போது துலாப் போடாத நாளேயில்லையெனலாம். காரணம் சோதினைக்கு முதல் கிழமை தலைகீழா நிண்டு படிச்சுப் பாடமாக்கிப் போட்டுப் போய் சோதினை செய்யலாம் எண்டதால. என்ர நண்பன் சொன்னதுதான் ஞாபகம் வருது... ’என்னடா எந்த நாளும் லெக்சருக்கு வந்து நித்திரை கொள்ளுறியே’ எண்டதுக்கு அவன் சொன்ன பதில் ’நித்திரையில தான் எனக்கு படிப்பிக்கிறது எல்லாம் விளங்கும்.’ சிலர் இருந்த படியே நித்திரை கொண்டுவிடுவார்கள். சிலர் கண்ணாடி போடுறது நித்திரை கொள்ளுறதை மறைக்கத்தான். பஸ்ஸுக்குள்ள பக்கத்தில இருக்கிறவன் துலாப்போட்டு எங்களுக்கு மேல விழுந்தா எரிச்சல்தான் வரும். அதே நேரம் கொஞ்சம் தள்ளியிருந்து துலாப் போடுறவனை, அவனுடைய இயக்கத்தை ரசிக்கச் சொல்லும். என்னத்தைச் சொன்னாலும் துலாப் போடுறவனுக்குத்தான் அவன்ர கஸ்டம் விளங்கும். </div>பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-65076811985572874222010-05-16T11:39:00.001+05:302010-05-16T11:43:00.715+05:30வார்த்தைகள் இல்லை...இரங்கல் கவிதை எழுத என்னால் முடியவில்லை...<br />
எத்தனை பேர் எண்டு எண்ணவும் முடியவில்லை...<br />
<br />
முள்ளியில் நின்று வெள்ளி முழைக்குமென்று விழி பிதுங்கியவர்களும்<br />
வாய்க்கால் வழியாக வாழ்வு வருமென்று மன்றாடி நின்றவர்களும்<br />
மனிதாபிமானம் மண்ணில் இன்னும் இருக்கென்று நம்பியவர்களும்<br />
இனி என்னத்தைச் செய்ய என எல்லாத்தையும் இழந்தவர்களும்<br />
சேர்ந்திருந்த செய்தியறிந்தும் செய்து முடித்தனர்...<br />
<br />
எதுவுமே நடக்காததைப் போல துடைத்தெடுத்தனர்...<br />
அதையும் வெளியில் தெரியாமல் இருட்டடிப்புச் செய்தனர்...<br />
அப்பாவிகளின் அழுகுரல்கள் அடங்கின...<br />
அவர்களின் நம்பிக்கைகளும் தாகங்களும் அடக்கப்பட்டன...<br />
அவர்களின் உடலங்களும் புதைக்கப்பட்டன...<br />
<br />
ஆரார் மாண்டார்? ஆரார் தப்பினர்? ஆரார் இன்னும் இருக்கின்றனர்<br />
அறியாது இன்னும் தவிக்கும் நெஞ்சங்களுக்கு<br />
ஆறுதல் சொல்லவும் என்னிடம் வார்த்தைகள் இல்லை...பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-1787085756961491672010-04-04T12:12:00.001+05:302010-04-04T12:17:24.669+05:30உழைப்பு பட்டுது...<div style="text-align: justify;">“என்ன முதலாளி, இப்ப கடும் உழைப்புப் போல... ஆளைக் காணவே கிடைக்குதில்லை...”</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">“சும்மா போடா, இருக்கிற வயித்தெரிச்சலைக் கிண்டாத... நானே எப்ப கடையை இழுத்து மூடுவன் எண்டிருக்கிறன்... நீ வேற விசர்க்கதை கதைக்கிறாய்... நான் மட்டுமில்லை இஞ்ச கன பேர் உந்த எண்ணத்திலதான் இருக்கிறாங்கள்.” </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நான் இந்தப் பதிலை சற்றும் எதிர்பார்க்கேல்ல.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">“அண்ணே, இப்பதானே பாதை திறந்திருக்கு சமான் மலிவா வரூது எல்லாச் சாமானும் எடுக்கலாம். விதம் விதமா உடுப்புகளை இந்தியாவிலேந்து கூட றக்கலாம். பிறகேன் இப்பிடிச் சலிக்கிறியள்”</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">“உங்க எல்லாரும் இப்பிடித்தான் நெச்சுக் கொண்டிருக்கிறியள் போல... நேற்றும் ஒருத்தன் போனில கதைக்கேக்க இப்ப உங்கட பிசினஸ் ஆத்தலுக்குப் போகும் தானே எண்டான். உங்களுக்கு எங்கயடா எங்கட நிலை விளங்கப்போகுது. உங்களைச் சொல்லித் தப்பில்லை.”</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">“அண்ணே, விஷயத்தைச் சொல்லன் அப்பத்தானே என்ன நடக்குதெண்டு எங்களுக்கும் விளங்கும்.”</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">“பாதை திறந்தாலும் திறந்தாங்கள். எங்கட உழைப்புப் பட்டுது. வேற இடத்து வியாபரிகள் நடைபாதையில கடையைப் போட்டு மலிவா விக்கிறான். எங்கட சனம் வாயைப் பிழந்து கொண்டு அங்கதானே போய் நிக்குதுகள். அவனுகள் அங்கனேக்க தரம் குறைஞ்ச, பாவிச்ச பொருட்களை பூசி மினுக்கிக் கொண்டு வந்து சோவுக்கு அடுக்கி வச்சிருக்கிறான். எங்கட சனம் பாய்ஞ்சு விழுந்தடிச்சுக் கொண்டு போய் அவனுகளட்ட தானே வாங்குதுகள்.”</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">“அது சரி... ஆனா உங்களுக்கெண்டு இருக்கிற கிறவுட் இருக்குத் தானே அண்ணே...”</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">“அந்த பிரச்சினையான காலத்திலயே நாங்கள் எவ்வளவு கஸ்டப்பட்டு சாமானுகளை றக்கி ஓரளவுக்கேனும் மலிவான விலையில நாங்கள் நட்டப்பட்டாலும் பரவாயில்லையெண்டு கடையை நடத்தின்னாங்கள். இப்ப என்னடா எண்டா எங்கட வாடிக்கையாளர்கள் அத மறந்திட்டு இஞ்சேந்து பஸ் ஏறிப் போய் மலிவா சாமான் வாங்கி வரீனம். நாங்கள் கடையைத் திறந்து வச்சிட்டு ஈ ஓட்ட வேண்டியதுதான்... வசந்தம் எண்டது எங்களுக்கில்லைத் தம்பி, அந்த வியாபாரிகளின்ர வாழ்க்கைக்குத் தான்... அத இன்னும் நீ விளங்கிக் கொள்ளேல்லையோ...”</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">“விளங்குது விளங்குது வசந்தத்தை நம்பி இல்லையண்ணே... எண்டாலும் இப்பிடி நீங்கள் ஈ ஓட்டுற நிலை வருமெண்டு நினைக்கேல்ல... எங்கட சனம் இதோட எண்டாலும் பொருளாதார கஸ்டங்களை மறந்து வாழத் தொடங்கும் எண்டெல்லே நினைச்சன்.”</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">“நீயே இப்பிடிச் சொன்னா எப்பிடி தம்பி? சாமானுகளை எங்கட சனம் வாங்குது.. சரி.. காசெங்க போகுது? அவன்ர பெட்டிக்குள்ளையெல்லே போகுது. அத எங்களுக்கு தந்தா எங்கட பசி ஆறும் தானே... நாங்களும் சந்தோசப் படுவம் தானே... இண்டைய நிலை என்னெண்டா தம்பி, மலிவா சாமன் வரூது. தரம் குறைஞ்ச சாமானுகள் தான்.. ஆனாலும் வரூது.. எங்கட சனம் சாமானுகளை வாங்கிக் கொண்டு ஆருக்கோ காசைக் குடுக்குதுகள். அவன் பெட்டீக்க போட்டுக் கொண்டு சந்தோசமாப் போய்ச் சேர்றான் . அவன் தன்ர ஊருக்குப் போய் தன்ர பிள்ளை குட்டியோட சந்தோசமா இருக்கிறன். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">காலம் காலமா வியாபாரம் செய்யுற எங்கட நிலையை யாரெண்டாலும் யோசிச்சுப் பாத்தனீங்களே? வியாபாரிகளுக்கு மட்டுமில்லைத் தம்பி... விவசாயிகளுக்கும் கடற்தொழிலாளர்களுக்கும் இதே நிலை தான். எங்களால நம்பி ஒரு தொழில செய்ய முடியேல்லத் தம்பி. எங்கட உற்பத்திகளை சனம் வாங்குதில்லை. வெளீலேந்து பாக்கேக்க எங்கட சனத்தின்ர தரம் உயருது... கஸ்டம் குறையுதெண்டு சொல்லிக் கொண்டிருக்கீனம், உண்மை அதில்லைத் தம்பி. எங்கட உழைப்புக் கேற்ற ஊதியம் எங்களுக்கு இல்லாமல் போகுது.”</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">“எனக்கு விளங்குது உங்கட நிலை... இனி உங்களுக்குப் பிரச்சினியில்லை. தற்காலிக கடையெல்லாத்தையும் மூடச் சொல்லி மாநகர சபை உத்தரவு போட்டிருக்காமே...”</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">“நீ அடுத்தனீயடா தம்பி... உது நடக்குமெண்டு நினைக்கிறியே? அடே.. சபைக்கு ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 20 000 ரூபா வருமானம் இதால வரூது. விட்டுடுவாங்கள் எண்டு நினைக்கிறியே... அது போக இவங்கள் முடிவெடுத்தாலும் நடைமுறைப் படுத்துறது இவங்கட கையில இல்லையே... இப்பிடித் தான் எல்லாமே... அடே உனக்கொரு விசயம் சொல்லுறன். உந்த சபை தான், தனக்குச் சொந்தமான நிலத்தை மூண்டு நட்சத்திர ஹோட்டல் கட்டுறதுக்கு தெற்குப் பக்க கொம்பனி ஒண்டுக்கு குடுத்திருக்கு. எங்கட சனம், வெளி நாட்டுச் சனம் எத்தினையோ பேர் கேட்டுக் குடுக்காதத அவங்களுக்கு குடுத்திருக்காம். எங்கட சனம் வருமானம் ஈட்டுறத அவங்களே விரும்பேல்லப் போல... ஆரட்டை இதெல்லாத்தையும் சொல்லியழ...” </div>பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-8074202338596193442010-03-17T22:54:00.002+05:302010-03-17T22:59:49.347+05:30நகைச்சுவையுணர்வு<div style="text-align: justify;">நகைச் சுவையுணர்வு என்பது இயல்பாக இருக்க வேண்டும். எதிர்பாராததாக இருக்க வேண்டும். பொருத்தமானதாக இருக்க வேண்டும். எல்லோரும் ரசிக்கும் படியாகவும் மற்றவர்களைப் புண்படுத்தாததாகவும் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அதை விட நகைச் சுவையை ரசிப்பதென்பது ஆளாளுக்கு வேறுபடும். சிலர் (நான் உட்பட) வெடிச் சிரிப்புச் சிரிச்சு (கக்கட்டம் போட்டுச் சிரிச்சு) நகைச்சுவையை ரசிப்பார்கள். உண்மையிலேயே தங்களை அறியாமலே நகைச்சுவையை ரசிப்பதனாலேயே எதிர்பாராத நேரங்களில் இவ்வாறு சிரிக்க நேரிடுகிறது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அது அப்பிடியே கிடக்க, எனக்குள் ஒரு உறுத்தல் இருக்கிறது. உண்மையிலேயே நாங்கள் தரமான நகைச்சுவையைத் தான் ரசிக்கிறோமா, இல்லை எங்களின் நகைச்சுவை உணர்வுகள் தரமற்ற ஒரு நிலைக்கு கொண்டு செல்லப் படுகின்றனவோ? இன்று அதிகமாக ரசிக்கப்படும் நகைச்சுவைகள் ஒருத்தரை புண்படுத்தவதாக இருப்பதையே காணக் கூடியதாக இருக்கிறது. அதாவது ஒருத்தரைக் கேவலப்படுத்திக் கொச்சைப் படுத்தும் கதைகளைத்தான் நாங்கள் நகைச்சுவை என்று அதிகமாக ரசிக்கிறோம். கூட்டம் ஒன்று சேர்ந்தால் ஒருத்தனை எல்லாரும் போட்டு கடிச்சு அவமானப் படுத்தும்போது அதனைப் பார்த்து சுற்றிவர நிக்கிற எல்லாருமே கைதட்டி ரசிச்சுச் சிரிச்சுக் கொண்டாடுவார்கள். இதுதான் உண்மையான நகைச்சுவை உணர்வா? </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என்னுடைய கருத்துப்படி சினிமாவில் கவுண்டமணி செந்திலைப் பார்த்து ‘கோமுண்டித் தலையா, பனங்கொட்டைத் தலையா’ என்றெல்லாம் கேவலமாக திட்டும் போதுதான் நாங்கள் எல்லாரும் கைதட்டிச் சிரிப்போம். அதிகமாக ரசிப்போம். ஒருத்தனை அவமானப் படுத்தும் வார்த்தைகள் தான் எங்களுக்கு நகைச்சுவை உணர்வை, ரசிப்பைத் தருகிறதென்றால் எங்களுடைய ரசனையின் மட்டம் சரியா? மற்றவர்களை அவமானப் படுத்தாமல் எல்லோருமே சேர்ந்து சிரிக்கக் கூடிய நகைச்சுவைகள் இல்லையா? உண்மையான நகைச்சுவைகளை, தக்க தருணத்தில் எதிர்பாராத விதமாக எழும் நகைச்சுவைகளை ரசிப்பதை விடுத்து தரங்குறைந்த ஒருத்தரை அவமானப் படுத்தும் நோக்கில் கூறும் வார்த்தைகளைத் தான் நாங்கள் சிறந்த நகைச்சுவை என்று ரசிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என்னுடைய எண்ணப்படி சினிமா எங்களை தரங்கெட்ட ரசனைக்கு இழுத்துச் செல்கிறது. மற்றவர்கள் அவமானப்படுவதை, துன்பப்படுவதை ரசிப்பதை ஊக்குவிக்க முயல்கிறது. எங்களை அறியாமலே நாங்கள் அவற்றிற்கு அடிமையாகிறோம். சினிமா தவிர பதிவுலகமாவது தரமான நகைச்சுவைகளை பதிவிடுகிறதா? அல்லது அவற்றைத் தேடியெடுத்து பதிவிட்டு வாசகர்களின் நகைச் சுவையுணர்வை தரமானதாக பேணுகிறதா? அவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கிறதா? இல்லை ‘நாசமாப் போக’ என்று மற்றவரை திட்டித் தீர்ப்பதைத் தான் சிறந்த நகைச் சுவையாக எண்ணி ரசிக்கிறதா? மற்றவர்கள் அவமானப் படும்போது கைதட்டிச் சிரிக்கும் கேவலமான விடயங்களைத்தான் தரமான நகைச் சுவையுணர்வு என்று தவறான பாதையில் மக்களை வழி நடத்தாமல் தரமான நகைச்சுவையை எல்லோருமே ரசிக்கக் கூடிய நகைச்சுவைகளை முன் கொணர முடியுமா? </div>பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-89555354895855425742010-02-21T23:02:00.001+05:302010-02-21T23:05:35.842+05:30விசேஷம்<div style="text-align: justify;">அண்மையில் ஊருக்குப் போய் மடத்திலேந்து கதைக்கேக்க அறிஞ்ச சில விடயங்கள் எனக்கு அதிர்ச்சியைத் தந்தன. இருந்தாலும் நான் இவற்றை எதிர்பார்க்காமல் இருக்கவில்லை. கலாசரம் பற்றிப் பலர் சொல்லீட்டாங்கள். நான் ஒன்றும் அதுகளை பற்றிச் சொல்லேல்லை. வேறு சில விடயம் பற்றித்தான் சொல்லப் போறன். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஊர்ப் பொடியன் ஒருத்தனுக்கு நடந்த சம்பவம் தான் இது. வவுனியாவுக்கு வந்த அவன் வழமையாக ஊரில பாவிக்கிற சாராயப் போத்தல் ஒண்டின்ர பெயரைச் சொல்லிக் கேட்டிருக்கிறான். கடைக்காரன் உடன கேட்டானாம் ‘தம்பி நீ யாழ்ப்பாணமோ?’ எண்டு. இவன் அதிர்ந்து போனான். ‘எப்பிடிக் கண்டு பிடிச்சீங்கள்?’ எண்டு இவன் கேக்க கடைக்காரன் சொன்ன பதிலைக் கேட்டு, கேட்டுக் கொண்டிருந்த நாங்கள் அதிர்ந்து போனம். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">யாழ்ப்பாணத்தைத் தவிர வேற எந்த இடத்திலையும் அந்தப் பெயருடைய சாராயம் இல்லையாம். இதே வியாபாரப் பெயருள்ள சாராயம் நாடு பூராவும் விக்கப்பட்டாலும், அக்குறித்த பெயருடைய சாராயம் யாழ்ப்பாணத்தில மட்டும் தானாம் விக்கப்படுது. அதில அற்ககோல் வீதாசாரம் அதிகமாம். யாழ்ப்பாண மக்களுக்காக எண்டு விஷேசமாகத் தயாரிக்கப்பட்டதாம். இந்த வியாபாரப் பெயருள்ள சாராயப் போத்தல்கள் எல்லாத்திலையும் போத்தல் கண்ணாடியில் அவங்கட வியாபாரப் பெயர் குறிச்சிருப்பாங்கள். ஆனா யாழ்ப்பாணத்துக்கு வாறதில, போத்தல் கண்ணாடியில எதுவுமே போட்டிருக்கமாட்டாங்கள். தம்பி இனியாவது கவனிச்சுப் பார் எண்டு கடைக்காரன் சொன்னானாம். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">எப்பிடியெல்லாம் சீரழிக்க முடியுமோ அப்பிடியெல்லாம் சீரழிக்க முயற்சி செய்யுறாங்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அதில கதைச்சுக் கொண்டிருந்த ஒருத்தன் இதச் சொன்னவனைக் கேட்டான் இப்பிடித் தெரிஞ்சு கொண்ட பிறகும் ஏன்ரா குடிக்கிறாய்? குடியை விட வேண்டியது தானே எண்டு. ‘அடே நான் இதில ஊறிப் போனன். என்னால விடேலாது. சொன்னா நம்ப மாட்டாய் நான் குடிக்கேல்லையெண்டா என்ர கை நடுங்கும்’ எண்டான். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">விட முடியும் எண்டு நினைக்கிறவங்கள் குடியை விடலாம். இனி பழகுறவங்கள் பழகாமல் விடலாம். குறிப்பா உந்தக் கம்பஸ் வழிய ராகிங் நேரம் கொடுமைப் படுத்திக் குடிக்கப் பழக்குவிக்கிற படிச்ச நாய்கள் யோசிச்சாலும் கொஞ்சம் குடியைக் கட்டுப்படுத்தி நல்ல சமுதாயத்தை வளர்க்க முடியும். குறிப்பாக நாம் இலக்கு வைக்கப் படுகிறோம் என்று தெரிந்த பின்னும் விழிப்புணர்வு அடையாமல் இருப்பது மடமைத் தனம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அடுத்த விடயம் வரி விதிப்பு. என்னை விட வயது மூத்த ஒருத்தர் சொன்னார், ‘தம்பி யாழ்ப்பாணத்துக்குப் வாற வியாபார வாகனங்களுக்கு வரி விதிக்கப்படுதாம். அவங்கட பார்வையில இன்னும் நாங்கள் வேற நாடுதான் தம்பி. வரித் தொகை பொடியள் அறவிட்டத விட கூடவாம். அவங்களாவது எங்களட்ட வாங்கி எங்கட பிரதேசங்களைக் கட்டியெழுப்பினாங்கள். இவங்கள்...???’ </div>பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.com9