Sunday, July 05, 2009

வலிக்குது...


யாரோ எல்லாரும் வருகிறார்கள்...
பேசும் மொழி புரியவில்லை...
இன்று இரவு...
ஒன்பது மணி...
விசாரணை...
என்ன செய்ய?
வேறு வழியில்லை...
செல்கிறேன்...

கைகளால் எதையென்று
மறைப்பது...?
என்னுடம்பில்...
எங்கெங்கோ எல்லாம்...
என்னென்னவோ எல்லாம்...
செய்கிறார்கள்...
எனக்கு நடப்பது என்னவென்று
என் அறிவுக்கு விளங்கவில்லை...
எத்தனை பேரென்று...
எண்ணத் தோணவில்லை...
வலி தாங்க முடியவில்லை...
என் அழுகை அவர்களின்
கொக்கரிப்பில் அடங்குகிறது.

எல்லாம் முடிந்தது...
வாகனத்தில் இறக்கப்படுகிறேன்..
தறப்பாழினுள் நுழைகிறேன்..
நேற்றுத்தான் அக்காளானவள்
ஓடி வந்து அணைக்கிறாள்.
எனக்கும் இப்பிடித்தான் பிள்ளை...
எங்கட நிலை இதுதான்...
யோசிச்சுப் பயனில்லை...

எல்லாமே திறந்த வெளி...
நடந்தது எல்லாருக்குமே தெரியும்..
எல்லாரும் என்னை என்ன நினைப்பார்கள்?
நான் விரும்பியா இதெல்லாம்
எனக்கு நடக்கிறது...
எம்மில் சிலருக்கு மட்டும் தான்
விதிக்கப்பட்டதோ...
நான் அப்பிடி என்ன தான்
பிழை செய்து விட்டேன்...?
நான் கவரிமானாகவா...?
இல்லை வாழவா...?
வழி தெரியவில்லை...
வலி தாங்கமுடியவில்லை...

1 comment :

  1. உண்மையிலேயே வலிதாங்க முடியவில்லை... :(

    ReplyDelete