அப்ப ஆசைப்பட்டன்...
வீட்டை சம்மதிக்கேல்ல...
நான் விரும்பிறன் எண்டு
எவ்வளவோ சொல்லிப் பாத்தன்...
மாற்றமில்லை...
வீதியில எல்லாரும் பாக்க
திரியுறன் தானே எண்டன்...
கையை விட்டுடு எண்டினம்...
கூடவே கூட்டிக்கொண்டு திரிஞ்சிட்டு
கழட்டி விட எனக்கு மனமில்லை...
எல்லாருமே எதிர்த்திச்சினம்...
உனக்கு வயசு பத்தாது
சட்டமே ஒத்துக் கொள்ளாது எண்டினம்...
கடைசில கையை விட்டுட்டன்...
இப்பவும் ஆசைப் படுறன்...
மறுப்புகள் இல்லை...
மினக்கெட நேரமில்லை...
ஓய்வும் கிடைக்குதில்லை...
வாகன சாரதி அனுமதிப்பத்திரம் எடுக்குறதுக்கு...
வாகனம் ஓட இப்பவும் ஆசைப்படுறன்...
குறிப்பு : அப்பாடா...!!! ஒரு மாரி ஐம்பது பதிவுகள் எழுதீட்டன்... என்னை உற்சாகப்படுத்திய, பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மனம் கனிந்த நன்றிகள்.
ம்ம்.. முதலிலை நானும் ஏதோ எண்டு நினைச்சு ஏமாறித் தான் போனன்.நல்லாத் தான் கிடக்குது
ReplyDeleteha ha.... நான் என்னவோ ஏதோ எண்டெல்லாம் நினைக்கேல்லை... bcoz.. i know rabbit catching dogs
ReplyDeleteநல்லாத்தான் இருக்கு.
ReplyDeleteஅது சரி லைசன்ஸ் எடுத்தாச்சோ இல்லை இன்னும் ஆசைதானோ.
50 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
வடலியூரான் கீத் மற்றும் வந்தியண்ணாவின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
ReplyDeleteகீத், இந்தப் பூனையும் பால் குடிக்குமோ??? எண்ட நிலை வராட்டிச் சரி....
வந்தியண்ணா, இன்னமும் ஆசைப்படுறன்...
நான் ஆசைப்பட்டன் 2008ல். ஆசைப்பட்ட ஒரு மாதத்திலேயே கிடைச்சிட்டு எனக்கு....
ReplyDeleteம்...சொல்லிய விதம் அருமை
ReplyDelete