Wednesday, April 01, 2009

வணக்கம்... வருக!

“ தாய்மடி” என்கின்ற எனது வலைப்பூவுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெரு மகிழ்வு அடைகிறேன்.

தாயின் மடிக்காக ஏங்கும் உள்ளங்களுக்காகவும் தாயின் அரவணைப்பிற்காக வாடும், தாய்மண்ணைப் பிரிந்து வாழும் உறவுகளுக்காகவும் இந்த வலைப்பூவைச் சமர்ப்பிக்கிறேன்.

எல்லாரும் வலைப்பூக்களில் தங்களின் பதிவையிடும்போது எனக்கும் ஒரு ஆசை. பால்குடியின் நப்பாசை, “நானும் ஒண்டு எழுதினா என்ன?” அதுக்காகவே இந்த வலைப்பூவை எழுத ஆசைப்படுகிறேன். இந்த வலைப்பூவை வாசிப்பவர்களே! என்னையும் உங்களில் ஒருத்தனாக ஏற்றுக்கொண்டு நான் விடும் தவறுகளை பால்குடிப் பிள்ளையென்று நினைத்து மறக்கும் படி வேண்டுகிறேன்.

இந்த வலைப்பூவில் நான் இதுவரை வாசித்தறிந்தவை கேட்டறிந்தவை பட்டறிந்தவற்றைக் கொண்டு என்னுடைய கருத்துக்களை உங்களோடு பகிரலாமென நினைக்கிறேன். எழுதும்போது சில கருத்துக்களை பிறரிடமிருந்து ‘சுட்டு’ கூட எழுதுவேன். தயவு செய்து கண்டுகொள்ளாதீர்கள். இது என்னுடைய ஆக்கங்களையும் சுமந்து வரும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
நன்றி

6 comments :

  1. வலையுலகத்திற்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  2. உங்களின் வரவேற்புக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. வலைப்பூக்களில் புதிதாக ஒரு பூ மலர்ந்துள்ளது... உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்... :)

    ReplyDelete
  5. தமிழ் உணர்வுடன் எழுதக்கூடிய உங்கள் போன்றோரின் வருகை வலைதளத்திற்கு தேவை!!!
    அன்புடன் வரவெற்கிறோம்

    ReplyDelete
  6. வரவேற்புக்கு மிக்க நன்றி. என்ன! வரவேற்பு பலமா இருக்குது?

    ReplyDelete